Tamilnadu
குடும்ப வறுமையால் நேர்ந்த அவலம்.. விடா முயற்சியால் காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்ற ‘ஆட்டோ ஓட்டுநர்’ !
புதுச்சேரி, ஜீவா நகரை சேர்ந்த கந்தன் (31) என்ற இளைஞர் சிறு வயதிலிருந்தே காவலராக வேண்டும் என்ற ஆசையில் இருந்து வந்துள்ளார். ஆனால், குடும்ப வறுமையின் காரணமாக, கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் ஆட்டோ ஓட்டும் தொழிலை செய்து வந்துள்ளார்.
மேலும் இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணமாகி 1 வயதில் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், புதுச்சேரியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு காவலர் தேர்வு தேதி அறிவிப்பு வெளியானதும், எப்படியாவது தனது கனவை நனவாக்கும் வேண்டும் என்பதால், ஆட்டோ ஓட்டிக்கொண்டே உடலை தகுதி செய்துக்கொண்டு, எழுத்து தேர்வுக்கும் தயரானார் கந்தன்.
பல்வேறு இன்னல்கள் வந்த சூழலிலும் தனது விடா முயற்சியால் உடல் தகுதி தேர்வில் தேர்வான அவர், அண்மையில் நடந்த எழுத்து தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளார். தனது விடா முயற்சியால் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதை சக ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!