Tamilnadu
வீட்டில் நிர்வாணமாகக் கிடந்த பெண்ணின் சடலம்.. ஆசைக்கு இணங்க மறுத்ததால் குத்திக் கொலை - வாலிபர் கைது !
திருவள்ளூர் மாவட்டம், குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி. கணவனைப் பிரிந்து தனது மூன்று பெண் பிள்ளைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் தனது வீட்டில் லட்சுமி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அரை நிர்வாணத்துடன் சடலமாக இருந்துள்ளார். இது குறித்து அப்பகுதி மக்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
உடனே அங்கு வந்தபோலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில், லட்சுமிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரும் பழகிவந்துள்ளனர். இந்நிலையில் குடித்துவிட்டு அவரது வீட்டிற்கு வந்த ராஜா லட்சுமியுடன் தகராறு செய்துள்ளார். இதையடுத்து அவர் வலுக்கட்டாயமாக ஆசையாக இருக்க முயன்றுள்ளார். இதற்கு லட்சுமி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர் லட்சுமியைக் குத்தி கொலை செய்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து போலிஸார் ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
அரசு உதவி வழக்குரைஞர் நிலை 2 பணி... தேர்வு செய்யப்பட்ட 45 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
சட்டம் - ஒழுங்கை உறுதிப்படுத்திய காவல்துறை: தமிழ்நாட்டில் முக்கிய குற்றங்கள் குறைந்தது: அதிகாரிகள் தகவல்!
-
வெளியானது ஐபிஎல் 2026 முதற்கட்ட அட்டவணை… El Clasico CSK vs MI போட்டிகள் இல்லையா? - முழு விவரம்!
-
“மீனவர்கள் கைதில் மெத்தனமாக இருப்பது ஏன்?” -நாடாளுமன்றத்தில் தி.மு.க MP-க்களின் அனல் பறந்த கேள்விகள்!
-
ரூ.35.45 கோடி மதிப்பில் முன்னாள் படைவீரர்கள் விடுதி, பயிற்சி மையக் கட்டடம்: அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்!