Tamilnadu
சைக்கிள் ஓட்ட கற்றுத்தரும்போது சிறுமியிடம் அத்துமீறல் - குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை: நீதிமன்றம் அதிரடி!
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராசு. இவர் தனது பகுதியில் இருக்கும் சிறுமியிடம் சைக்கிள் ஓட்ட கற்றுத் தருவதாகக் கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியும் அவரிடம் சைக்கிள் ஓட்ட கற்றுள்ளார்.
அப்போது, ராசு சிறுமியை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று அங்கு அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் போலிஸாரிடம், நடந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து ராசுவை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
இந்த வழக்கு மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் சிறுமியை ராசு பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானதை அடுத்து அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!