Tamilnadu
சைக்கிள் ஓட்ட கற்றுத்தரும்போது சிறுமியிடம் அத்துமீறல் - குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை: நீதிமன்றம் அதிரடி!
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராசு. இவர் தனது பகுதியில் இருக்கும் சிறுமியிடம் சைக்கிள் ஓட்ட கற்றுத் தருவதாகக் கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியும் அவரிடம் சைக்கிள் ஓட்ட கற்றுள்ளார்.
அப்போது, ராசு சிறுமியை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று அங்கு அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் போலிஸாரிடம், நடந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து ராசுவை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
இந்த வழக்கு மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் சிறுமியை ராசு பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானதை அடுத்து அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!