Tamilnadu
சைக்கிள் ஓட்ட கற்றுத்தரும்போது சிறுமியிடம் அத்துமீறல் - குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை: நீதிமன்றம் அதிரடி!
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராசு. இவர் தனது பகுதியில் இருக்கும் சிறுமியிடம் சைக்கிள் ஓட்ட கற்றுத் தருவதாகக் கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியும் அவரிடம் சைக்கிள் ஓட்ட கற்றுள்ளார்.
அப்போது, ராசு சிறுமியை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று அங்கு அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் போலிஸாரிடம், நடந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து ராசுவை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
இந்த வழக்கு மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் சிறுமியை ராசு பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானதை அடுத்து அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
Also Read
-
“LPG விலையை ஏற்றுவது சரியல்ல” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
”MI-யுடன் CSK தோற்றால் பிளே ஆப் வாய்ப்பு என்னாகும்? காத்திருக்கும் CSK ரசிகர்கள்” : முழு விவரம்!
-
மோடி அரசின் தேர்தலுக்கான பரிசு இது : எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு ராகுல் காந்தி எம்.பி கண்டனம்!
-
”கிடு கிடு விலை உயர்வில் சிலிண்டர்கள்.. 5 மாநில தேர்தல் முடிந்ததும் ஆட்டம் தொடக்கம்” : முழு விவரம் அறிக!
-
”சூடான வெப்பத்திற்கு இடையே வந்த மழை அறிவிப்பு.. எப்போது தொடங்கும் தென்மேற்கு பருவமழை” : முழு விவரம்!