Tamilnadu
ஆதரவாளர்களை வைத்து கொலை மிரட்டல் விடுக்கும் ரவுடி பேபி சூர்யா.. டி.ஐ.ஜி அலுவலகத்தில் பரபரப்பு புகார்!
டிக் டாக் வீடியோ மூலம் பிரபலமானவர் ரவுடி பேபி சூர்யா. மதுரையைச் சேர்ந்த இவர் முதலில் சினிமா பாடல்களுக்கு ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்டு வந்தார். பின்னர், ஆபாசமாகப் பேசி வீடியோக்களை வெளியிடத் தொடங்கினார்.
அண்மையில் கோவையைச் சேர்ந்த பெண் ஒருவரை ஆபாசமாகத் திட்டி சூர்யாவும் அவரது ஆண் நண்பர் சிக்கந்தர்ஷாவும் வீடியோ வெளியிட்டிருந்தனர்.
இந்த வீடியோவைப் பார்த்த பாதிக்கப்பட்ட பெண் இதுகுறித்து கோவை மாவட்டம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து சூர்யா மற்றும் சிக்கந்தர்ஷாவை கடந்த மாதம் 4ஆம் தேதி கைது செய்தனர். பின்னர் இருவரும் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
இந்நிலையில், ரவுடி பேபி சூர்யாவின் ஆதரவாளர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாகப் பாதிக்கப்பட்டவர்கள் கோவை டி.ஐ.ஜி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் ரவுடி பேபியின் ஆதரவாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Also Read
-
தமிழ்நாட்டுக்கு பாராமுகம் காட்டினால்,தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்- தினகரன் தலையங்கம் எச்சரிக்கை!
-
முதலில் எய்ம்ஸ் அல்வா, இப்போது மெட்ரோ அல்வா: இது பாஜக தமிழ்நாட்டுக்கு இழைக்கும் அநீதி- முரசொலி விமர்சனம்!
-
“தமிழ்நாட்டை பசுமை வழியில் அழைத்துச் செல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
10 ஆயிரம் வேலைவாய்ப்புகள் : ANSR நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“மதுரை மெட்ரோவை தொடர்ந்து விமானத்துறையிலும் அதே பாகுபாடு!” : சு.வெங்கடேசன் கண்டனம்!