Tamilnadu
”கருவில் இருப்பது ஆணா பெண்ணா என அறிய ரூ.8,000 வெட்டுங்க” - கையும் களவுமாக பிடிபட்ட அதிமுக பிரமுகர்!
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் கதிரம்பட்டி அருகே சட்டவிரோதமாக கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை ஸ்கேன் மூலம் கண்டறிந்து வருவதாக புகார் வந்தது.
அதனடிப்படையில் சென்னை சுகாதாரத்துறை கண்காணிப்பு குழுவினர், திருப்பத்தூர் அடுத்த கதிரம்பட்டி மகிமை கனரன் தோட்டம், என்கிற காட்டுப் பகுதியில் ஒரு குடிசை கூடாரத்தில் சுமார் 10 பெண்களை அமர வைத்து அவர்களுடைய கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்பது ஸ்கேன் மூலமாக கண்டறியப்பட்டு வருவதை கண்காணித்தனர்.
அப்பொழுது சுகுமார் மற்றும் அதிமுக பிரமுகர் வேடியப்பன் ஆகிய 2 பேரை கையும் களவுமாக பிடித்தனர். அதனைத் தொடர்ந்து கருவில் இருப்பது ஆணா பெண்ணா எனக் கண்டறிய ஒவ்வொருவரிடமும் 8000 ரூபாய் என பணத்தை பெற்றுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் ஏற்கனவே 4 முறை கைது செய்து சிறை சென்றவர் எனவும் தெரியவந்தது. மேலும் அவரிடமிருந்து ஸ்கேன் செய்யும் கருவி மற்றும் 75 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர்.
Also Read
-
பொத்தென்று மயங்கி விழுந்த அதிமுக மாவட்டச் செயலாளர்... கண்டுகொள்ளாமல் பேசிக்கொண்டிருந்த பழனிசாமி! - video
-
“பழனிசாமியின் முகவர்... அதிமுகவின் B டீம்...” - அன்புமணிக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலடி!
-
தமிழ்நாடு அரசின் Iconic Projects... அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு... விவரம்!
-
திருத்தணி வட மாநில இளைஞர் தாக்கப்பட்ட விவகாரம் : நடந்தது என்ன? - வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் விளக்கம்!
-
“கோவை மக்களுக்கு 2026 புத்தாண்டுக்கான பரிசு இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி!