Tamilnadu
சுண்டு விரலை கடித்த அண்ணன்.. ஆத்திரத்தில் மண்வெட்டியால் வெட்டி கொலை செய்த தம்பி: விசாரணையில் பகீர்!
விருதுநகர் மாவட்டம், பாவாலி வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் இலக்கன். இவரது சகோதரர் அழகு முனீஸ்வரன். அண்ணன் தம்பிகளான இவர்கள் இருவரும் வீட்டில் நேற்று தணியாக இருந்துள்ளனர்.
அப்போது திடீரென இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குடிபோதையிலிருந்த இலக்கன் தம்பி அழகுமுனிஸ்வரனின் சுண்டு விரைலை கடித்துள்ளார்.
இதில், ஆவேசமடைந்த முனீஸ்வரன் வீட்டிலிருந்து மண்வெட்டியை எடுத்து இலக்கனை வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த இலக்கனை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறினர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.
இதில் அண்ணன்,தம்பிகளுக்கு இடையே சொத்து தகராறு இருந்துவந்துள்ளது. இதன் காரணமாகவே இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Also Read
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?
-
“இன்றைய அதிமுக பற்றி அன்றைக்கே ஹைக்கூ கவிதையை கூறினார் இரகுமான் கான்” - துணை முதலமைச்சர் கிண்டல்!
-
3.5 லட்ச அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்காக.. காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைக்கும் முதல்வர்!