Tamilnadu
சிறுமியின் கண்ணத்தை கிள்ளியதற்காக கம்பி எண்ணும் கணக்கு வாத்தியார்; தருமபுரி போலிஸார் அதிரடி!
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை, பாலியல் தொந்தரவுகள் குறித்த புகார் மீது தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வகையில் தருமபுரி மாவட்டம் லிங்கநாயக்கனஹள்ளி பகுதியில் இயங்கி வரும் அரசுப்பள்ளி ஆசிரியர் மீதான புகார் மீதும் உடனடியாக தக்க நடவடிக்க எடுக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி, லிங்கநாயக்கனஹள்ளி பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் கணக்கு பாடம் எடுக்கும் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சேரன் (50).
இவர், அந்த பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் கணக்கு பாடம் போட்டு சேரனிடம் காட்டியிருக்கிறார். அப்போது தவறாக கணக்கு போட்டதாகச் சொல்லி அந்த மாணவியின் கண்ணத்தை கிள்ளியும், முதுகிலும் தட்டியிருக்கிறார்.
இதனையடுத்து வீட்டுக்குச் சென்ற அந்த மாணவி, பெற்றோரிடம் சேரனின் செயல் குறித்து கூற அவர்கள் கடத்தூர் போலிஸிடம் புகார் கூறியிருக்கிறார்கள்.
அதன் பேரில் கணக்கு ஆசிரியர் சேரனை கைது செய்த போலிஸார் மாணவியின் கண்ணத்தை கிள்ளி, முதுகை தட்டியது உறுதியானது. இதனையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
Also Read
-
"நாக்பூர் குருபீட அடிமைச் சேவகர் பழனிசாமி இது பற்றி பேசலாமா?- CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம்!
-
”அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் பழனிசாமி” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தேதி நீட்டிப்பு... அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு !
-
”திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும்” : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
பா.ஜ.கவின் கொத்தடிமையாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி : இரா.முத்தரசன் கடும் தாக்கு!