Tamilnadu
நீதிபதியை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற உதவியாளர்... விசாரணையில் வெளியான ‘பகீர்’ காரணம்!
சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி பொன்.பாண்டியனை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற அலுவலக உதவியாளரை போலிஸார் கைது செய்தனர்.
சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், 4வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் பொன்.பாண்டியன். இன்று பணிக்கு வந்த நீதிபதி பொன்.பாண்டியன் தன்னுடைய அறையில் வழக்கு விசாரணை குறித்து குறிப்பு எடுத்துக்கொண்டு இருந்துள்ளார்.
அப்போய்ஜி அங்கு அலுவலக உதவியாளராக பணிபுரிந்த பிரகாஷ் என்பவர் கத்தியால் குத்திக் கொல்ல முயன்றுள்ளார். இதனைப் பார்த்து சுதாரித்த நீதிபதி, அலறியபடி வெளியே ஒடி வந்துள்ளார்.
தாக்குதலில் நீதிபதி பொன்.பாண்டியனுக்கு மார்பு பகுதியில் சிறு காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் மற்றும் போலிஸார் பிரகாஷை மடக்கிப்பிடித்தனர். தொடர்ந்து அவரை, அஸ்தம்பட்டி காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், பிரகாஷுக்கு பல முறை பணியிட மாறுதல் வழங்கப்பட்டதாகவும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக கத்தியால் குத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
காயமடைந்த நீதிபதி பொன்.பாண்டியன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் வைத்தே நீதிபதியை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
அரசு உதவி வழக்குரைஞர் நிலை 2 பணி... தேர்வு செய்யப்பட்ட 45 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
சட்டம் - ஒழுங்கை உறுதிப்படுத்திய காவல்துறை: தமிழ்நாட்டில் முக்கிய குற்றங்கள் குறைந்தது: அதிகாரிகள் தகவல்!
-
வெளியானது ஐபிஎல் 2026 முதற்கட்ட அட்டவணை… El Clasico CSK vs MI போட்டிகள் இல்லையா? - முழு விவரம்!
-
“மீனவர்கள் கைதில் மெத்தனமாக இருப்பது ஏன்?” -நாடாளுமன்றத்தில் தி.மு.க MP-க்களின் அனல் பறந்த கேள்விகள்!
-
ரூ.35.45 கோடி மதிப்பில் முன்னாள் படைவீரர்கள் விடுதி, பயிற்சி மையக் கட்டடம்: அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்!