Tamilnadu
OPSன் சொந்த தொகுதியில் வெற்றிக்கொடி நாட்டிய தி.மு.க; விழிப்பிதுங்கி நிற்கும் அ.தி.மு.க!
ஊரக உள்ளாட்சித் தேர்தலை தொடர்ந்து நடத்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.
21 மாநகராட்சிகளையும் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளுமே கைப்பற்றும் வகையிலேயே தேர்தல் முடிவுகள் வந்த வண்ணம் உள்ளது.
இதனிடையே அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்ட கொங்கு மண்டல மாவட்டங்களை திமுக கைப்பற்றி வருகிறது. அதுபோக, அதிமுகவினரின் சொந்த தொகுதிகளிலும் திமுக வெற்றியை ருசித்து வருகிறது.
Also Read: ஒரு ஓட்டு கூட பெறாத அ.தி.மு.க வேட்பாளர்.. மோசமான சாதனையில் பா.ஜ.கவோடு போட்டி போடும் அ.தி.மு.க!
அவ்வகையில் தேனி மாவட்டத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த தொகுதியான பெரியகுளத்திற்குட்பட்ட குச்சனூர் பேரூராட்சியில் உள்ள 12 வார்டுகளிலும் திமுக வெற்றி பெற்றிருக்கிறது.
முன்னாள் அமைச்சரான செங்கோட்டையனின் கோபிசெட்டிப்பாளையம் நகராட்சியை 40 ஆண்டுகளுக்கு கைப்பற்றியிருக்கிறது திமுக.
அதேபோல, எஸ்.பி.வேலுமணியின் தொண்டாமுத்தூர் தொகுதி, திருப்பூர், சேலம், ஈரோடு என வளைத்து வளைத்து திமுகவின் வெற்றிக் கொண்டாட்டம் தொடர்ந்து வருகிறது. இவை அனைத்தும் அதிமுகவுக்கு பெரும் பின்னடைவை நோக்கி இட்டுச் சென்றிருக்கிறது.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!