Tamilnadu
மீண்டும் ஒத்த ஓட்டு வாங்கிய பா.ஜ.க.. தி.மு.க வேட்பாளரிடம் படுதோல்வி - கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் !
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு கடந்த 19ம் தேதி வாக்குபதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று காலையில் 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகளையும் தி.மு.க கைப்பற்றுகிறது.அதேபோல்,119 நகராட்சிகளையும், 320 பேரூராட்சிகளையும் தி.மு.க. கைப்பற்றுகிறது. மேலும் அதிமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களை தி.மு.க கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். குறிப்பாக எடப்பாடி பழனிசாமி வசிக்கும் வார்டியே அ.தி.மு.க-வால் வெற்றி பெறமுடியவில்லை.
அதேபோல் அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகி தனியாகத் தேர்தலை சந்தித்த பா.ஜ.க வேட்பாளர்கள் டெபாசிட்கூட வாங்க முடியாமல் படுதோல்வியடைந்து வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு பவானி சாகர் பேரூராட்சியில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் ஒரே ஒரு ஓட்டு வாங்கி படுதோல்வியடைந்துள்ளார்.
இவருக்கு பா.ஜ.கவினர் கூட ஒட்டுபோடவில்லை என்பது தெரியவருகிறது. இதனால், மீண்டும் ஒத்த ஓட்டு பா.ஜ.க இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த முறை நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலின்போது கோவை மாவட்டம், குருடம்பாளையம் ஊராட்சி 9 வது வார்டில் போட்டியிட்ட கார்த்திக் என்பவர் ஒரே ஒரு ஓட்டு மட்டுமே வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
இந்தியப் பெருங்கடலில் பல மடங்கு அதிகரித்த வெப்பநிலை : கால நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கை !
-
பிரஜ்வல் ரேவண்ணாவை பிரதமர் மோடி எதற்காக பாதுகாத்து வருகிறார்? : ராகுல் காந்தி கேள்வி!
-
மேற்கு வங்க ஆளுநர் மீதான பாலியல் புகார் : 8 பேர் கொண்ட குழுவை அமைத்து கொல்கத்தா போலீஸ் உத்தரவு !
-
ஊழியரை இரும்பு ராடால் தாக்கிய வழக்கில் கே.ஜி.எஃப் விக்கி கைது : போலிஸ் அதிரடி!
-
3 ஆண்டுகள் - 6115 புத்தொழில் நிறுவனங்கள் : திராவிட மாடல் அரசின் மகத்தான சாதனை!