Tamilnadu
“கோவையில் அ.தி.மு.க மேயர் வேட்பாளர் என்று சொல்லப்பட்ட பெண் படுதோல்வி” : கோவையை கைப்பற்றும் தி.மு.க!
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு கடந்த 19ம் தேதி வாக்குபதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தி.மு.க கூட்டணி வேட்பாளர்கள் பெரும்பான்மையைன இடங்களில் வெற்றிவாகை சூடிவருகின்றனர். மாநகராட்சியில் 307 இடங்களிலும், நகராட்சியில் 1192 இடங்களிலும், பேரூராட்சியில் 2312 இடங்களிலும் தி.மு.க கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.
இந்த அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க வேட்பாளர்கள் கடும் பின்னடைவை சந்தித்து வருகின்றனர். மேலும் அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்டு வந்த கோவை, சேலம் மாவட்டங்களை தி.மு.க கூட்டணி கைபற்றி வருகிறது.
இந்நிலையில், கோவை மாநகராட்சி 7வது வார்டில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் கோவிந்தராஜ் 3,359 வாக்குகள் பெற்று, அ.தி.மு.க மேயர் வேட்பாளராக கருதப்பட்ட கிருபாளினி படுதோல்வியடைவைத்துள்ளார். கோவை மாநகராட்சியில் இதுவரை தி.மு.க கூட்டணி 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
Also Read
-
காசாவுக்கு பிறகு லெபனானை தாக்க தயாராகும் இஸ்ரேல் ? எல்லையில் இருந்து 1,80,000 பேர் இடம்பெயர்வு !
-
பாஜக தேசிய தலைவர் JP நட்டா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு - பின்னணி என்ன ?
-
பாஜக தேர்தல் அறிக்கை : 76 பக்கத்தில் 67 முறை இடம்பெற்ற ‘மோடி’ பெயர் - வருத்தெடுக்கும் இணையவாசிகள்!
-
மோடியின் பேச்சு இந்தியா கூட்டணி வெல்லும் என அவரின் அச்சத்தை வெளிப்படுத்துகிறது - திருமாவளவன் !
-
பிரசாரத்தின்போது மோடி முகத்தை மறைத்த வேட்பாளர்... மோடி கொடுத்த Ultimate Reaction - பின்னணி என்ன?