Tamilnadu
தேர்தல் நடைபெறும் போதே QR Code மூலம் பணப்பட்டுவாடா : கையும் களவுமாக பிடிபட்ட சென்னை அ.தி.மு.க நிர்வாகி!
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கிறது. இதனிடையே சென்னை மயிலாப்பூர் கேசவபுரம் தெற்கு கோவில் தெருவில் வீடு வீடாக டோக்கன் கொடுக்கப்படுவதாக 9-வது மண்டல பறக்கும்படை தேர்தல் அதிகாரி தேவகுமாரனுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி மற்றும் மயிலாப்பூர் போலிஸார் மயிலாப்பூர் கேசவபுரம் தெற்கு கோவில் தெருவிற்கு சென்று கண்காணித்தனர்.
அப்போது அதிமுகவைச் சேர்ந்த 124-வது வட்ட செயலாளர் தங்கதுரை என்பவர் வீடு வீடாக சென்று டோக்கன் கொடுக்கும் போது மடக்கி பிடித்தனர்.
அவரிடம் தேர்தலுக்கு வாக்களிக்கும் நபர்களுக்கு QR குறியீடு கொண்ட அதிமுக சின்னம், ஜெயலலிதா படம் அச்சடிக்கப்பட்ட கார்டுகள் இருந்தது. அதனை பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர் வைத்திருந்த நோட்டு ஒன்றில் பல பெயர்கள் கையால் எழுதப்பட்ட துண்டுச்சீட்டு வைத்திருந்ததையும் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து தங்கதுரையை மயிலாப்பூர் போலிஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
நிலத்தை சமன் செய்யும்போது கிடைத்த 1 இல்ல 2 இல்ல... 86 தங்க நாணயங்கள்... திருப்பத்தூரில் நடந்தது என்ன?
-
“சூனா பானா வேடம்... எகத்தாளத்தை பாருங்க… லொள்ள பாருங்க..” - பழனிசாமியை கலாய்த்த அமைச்சர் ரகுபதி!
-
தி.மலை அரசு மாதிரி பள்ளிக்கு முதல்வர் திடீர் Visit.. செஸ் போட்டியில் பதக்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு!
-
திருண்ணாமலையில் 2 நாட்கள் வேளாண் கண்காட்சி... அமைக்கப்பட்டுள்ள அரங்குகளின் விவரங்கள் உள்ளே!
-
திருவாரூர் : பெற்றோரை இழந்த குழந்தைகள் - அரவணைத்து கொண்ட திராவிட மாடல் அரசு!