Tamilnadu
காதலிக்கு வேறொருவருடன் திருமணம்.. வீடியோ காலில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு - என்ன நடந்தது?
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ரியாஸ். இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி ரியாஸை பிரிந்து மகளுடன் தனியாக சென்றுவிட்டார்.
இதையடுத்து ரியாஸ் பெங்களூரிவில வேலைபார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வேலை தேடிவந்துள்ளார். மேலும் பெங்களூருவை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் அவருக்கு வேறொருவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனால் ரியாஸ் விரக்தியில் இருந்துள்ளார்.இதையடுத்து சம்பவத்தன்று தனது நண்பர் ஒருவருக்கு ரியாஸ் வீடியோ கால் மூலம் பேசியுள்ளார்.
அப்போது, என்னால் வாழ முடியவில்லை. நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என கூறிய படியே வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீடியோவில் இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
பின்னர் போலிஸார் ரியாஸ் தங்கியிருந்த வீட்டிற்கு வந்து அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கா மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
‘‘இதுதான் RSS, பாஜக ஆட்சி” - முஸ்லிம்களுக்கு மகப்பேறு பார்க்க மறுத்த உ.பி. அரசுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
தொழில்முனைவோர்களின் உற்பத்தி பொருட்களை ஊக்குவிக்க e-marketplace... தமிழ்நாடு அரசு அசத்தல் அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டில் எப்போதும் இல்லாத வகையில் நெல் சாகுபடி” -அமைச்சர் MRK பன்னீர்செல்வம் விவரங்களுடன் அறிக்கை!
-
“முஸ்லீம்-குலாம் சிகிச்சை பார்க்க முடியாது..” -கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்க மறுத்த உ.பி அரசு மருத்துவர்!
-
அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவி பேராசிரியர்கள் நிரந்தரமாக நியமனம் - அமைச்சர் கோவி.செழியன் !