Tamilnadu
தடுமாறிய மூதாட்டி.. தோள் கொடுத்து காலணி அணிவித்த டி.எஸ்.பி. - குடியாத்தம் நகராட்சியில் நெகிழ்ச்சி!
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்ய நாளைதான் கடைசி நாள் என்பதால் வேட்பாளர்கள் அடுத்தடுத்து மனுத்தாக்கல் செய்து வருகின்றனர்.
இப்படி இருக்கையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி அலுவலகத்திலும் 36 வார்டுகளுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்காக டி.எஸ்.பி. ராமமூர்த்தி தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், அவ்வழியே நடந்து வந்த மூதாட்டி ஒருவரின் காலணி இடறியிருக்கிறது. கையில் பை வைத்திருந்தால் தடுமாறியபடியே நடந்து வந்திருக்கிறார் மூதாட்டி.
இதனைக் கண்ட டி.எஸ்.பி ராமமூர்த்தி சிறிதும் யோசிக்காமல் மூதாட்டியின் காலணியை சரி செய்து அவருக்கு அணிவித்திருக்கிறார். பட்டப்பகலில் பொதுவெளியில் நடந்த இந்த நிகழ்வு அப்பகுதியினரிடையே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுபோக மூதாட்டி டி.எஸ்.பி காலணி மாட்டிவிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!