Tamilnadu
“என் மேல கேஸ் கொடுத்தாலும் பரவாயில்ல.. வீடு புகுந்து வெட்டுவேன்” : வேட்பாளர்களை மிரட்டிய அதிமுக நிர்வாகி!
தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. பல்வேறு அரசியல் கட்சியினர் ஆலோசனைக் கூட்டம் மற்றும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் சாத்தூர் நகர்மன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டம் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
அப்போது கூட்டத்தில் பேசிய ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி, “அ.தி.மு.க-வில் இரட்டை இலையில் ஜெயித்து எந்த கவுன்சிலர் கட்சி மாறினாலும் அவரை வீடுபுகுந்து வெட்டுவேன். மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன்கிட்ட சொல்லிட்டு வெட்டுவேன். என் வெட்டுதான் முதல் வெட்டாக இருக்கும். எவர் கட்சி மாறுகிறாரோ, கட்சியை வைத்து ஜெயித்துவிட்டு, எவரெவர் கட்சி மாறுகிறார்களோ, அவருடைய போஸ்ட்மார்ட்டம் அரசு மருத்துவமனையில்தான் நடக்கும். இப்பவே நான் சொல்கிறேன்.
இந்தப் பேச்சால், என் மேல் கேஸ் கொடுத்தாலும் பிரச்சனை இல்லை. ஏனென்றால், போன உள்ளாட்சி தேர்தலின்போது, என் மேல் உள்ள கேஸ், தேர்தலையே பார்க்கவிடல. அது ஒண்ணும் பிரச்சனை இல்ல. கட்சி மாறுவது தெரிந்தால், இரட்டை இலையில் ஜெயிச்சுட்டு கட்சி மாறி போனால், உங்க ஆத்தாகிட்ட வாய்க்கரிசி வாங்கிட்டு போங்க” என மிரட்டும் வகையில் பேசியுள்ளது அ.தி.மு.க வட்டாரத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”கள்ள மவுனம் பழனிசாமிக்கு கைவந்த கலை” : அமைச்சர் துரைமுருகன் பதிலடி!
-
“வாய் தவறி கூறிவிட்டேன்...” - கடவுளே மோடியின் பக்தர் என்ற விவகாரம் : பாஜக வேட்பாளர் புதிய விளக்கம்!
-
“கடவுளே எங்க மோடி பக்தர்” - பாஜக வேட்பாளர் பேச்சுக்கு மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் -மக்கள் வலியுறுத்தல்!
-
“அந்த கடவுளே எங்க மோடியின் பக்தர்தான்...” - எல்லை மீறிய பாஜக வேட்பாளருக்கு குவியும் கண்டனம் !
-
“மோடிக்கு ஏற்றாற்போல் விதிகளை வளைத்த தேர்தல் ஆணையம்... வெட்கக்கேடானது” - குவியும் கண்டனம்!