Tamilnadu
நகை ஆசையால் வந்த வினை.. நகைக்கு அதிக வட்டி தருவதாகக் கூறி ரூ. 4 கோடி சுருட்டிய தம்பதி - நடந்தது என்ன?
சேலம் மாவட்டம், வீராணம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் - லலிதா. இந்த இளம் தம்பதி லலிதாம்பிகை ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில், 6 பவுனுக்கு நங்க நகை டெபாசிட் செய்தால் வட்டியாக ரூ. 25 ஆயிரம் தரப்படும் என இவர்கள் அறிவித்திருந்துள்ளனர்.
இதனால் பொதுமக்கள் பலரும் நகையை டெபாசிட் செய்துள்ளனர். ஆனால், தம்பதியினர் கூறியபடி யாருக்கும் தொகை கொடுக்கப்படவில்லை. இந்நிலையில், நேற்று நகைக்கடை பூட்டியிருந்தைப் பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் தம்பதியினர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கும் வீடு பூட்டியே இருந்தது.
இதனால் பொதுமக்கள், தங்கராஜின் மாமனார் வீட்டிற்கு முன்பு முற்றுகையிட்டனர். பின்னர் அங்கு வந்த போலிஸார் அவர்களைச் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். இதையடுத்து போலிஸார் நகை கடை பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது, தங்கராஜ் மற்றும் கடை ஊழியர்கள் கடையிலிருந்த நகைகளை எடுத்துக் கொண்டு காரில் செல்வது பதிவாகியுள்ளது. இதையடுத்து தலைமறைவான தம்பதிகளை போலிஸார் தீவிரமான தேடி வருகின்றர். மேலும், இவர்கள் மூலம் பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாகக் கூறி ரூ. 4 கோடி வரை மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.
Also Read
-
“இஸ்லாமியர்களின் உரிமைக்காக முதல் ஆளாக குரல் கொடுப்பது தி.மு.க. தான்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்.23 அன்று வாக்குப்பதிவு! : இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
-
NDA-க்கு எதிராக முழங்கிய தமிழ்நாடு! : மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு! : தமிழ்நாடு அரசின் அதிரடி அறிவிப்பு!
-
“மக்களுக்காக மேலும் உழைக்க காத்திருக்கிறோம்!” : திருப்பத்தூரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!