Tamilnadu
உடல்நிலை பாதிக்கப்பட்ட வ.உ.சி கொள்ளுப்பேத்தி : முப்பதே நிமிடத்தில் நடவடிக்கை எடுத்த அமைச்சர் மா.சு.,!
விடுதலைப் போராட்ட வீரர் செக்கிழுத் செம்மல் வ.உ.சிதம்பரனாரின் கொள்ளுப் பேத்தி உடல்நலைக் குறைவால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்துள்ளார்.
முன்னதாக இது குறித்து பலரும் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டு, தமிழ்நாடு அரசு அவருக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து பதிவிட்டு வந்தனர்.
இந்த பதிவைப் பார்த்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடனே, மதுரை அரசு மருத்துவமனை முதல்வரைத் தொடர்பு கொண்டு, அரசு சார்பில் தனி உதவியாளர் மற்றும் முறையான சிகிச்சை அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து தனியாக மருத்துவக்குழு ஒன்று அமைக்கப்பட்டு வ.உ.சியின் கொள்ளு பேத்திக்குத் தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் தமிழ்நாடு அரசின் இந்த துரித நடவடிக்கைக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோருக்கும் சமூக வலைதளங்களில் பலரும் நன்றி தெரிவித்துப் பாராட்டி வருகின்றனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!