Tamilnadu
உடல்நிலை பாதிக்கப்பட்ட வ.உ.சி கொள்ளுப்பேத்தி : முப்பதே நிமிடத்தில் நடவடிக்கை எடுத்த அமைச்சர் மா.சு.,!
விடுதலைப் போராட்ட வீரர் செக்கிழுத் செம்மல் வ.உ.சிதம்பரனாரின் கொள்ளுப் பேத்தி உடல்நலைக் குறைவால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்துள்ளார்.
முன்னதாக இது குறித்து பலரும் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டு, தமிழ்நாடு அரசு அவருக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து பதிவிட்டு வந்தனர்.
இந்த பதிவைப் பார்த்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடனே, மதுரை அரசு மருத்துவமனை முதல்வரைத் தொடர்பு கொண்டு, அரசு சார்பில் தனி உதவியாளர் மற்றும் முறையான சிகிச்சை அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து தனியாக மருத்துவக்குழு ஒன்று அமைக்கப்பட்டு வ.உ.சியின் கொள்ளு பேத்திக்குத் தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் தமிழ்நாடு அரசின் இந்த துரித நடவடிக்கைக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோருக்கும் சமூக வலைதளங்களில் பலரும் நன்றி தெரிவித்துப் பாராட்டி வருகின்றனர்.
Also Read
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
-
தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பு : வரம்பு மீறிய காவல்துறை... நீதிமன்றத்தில் உதயநிதி தரப்பு வாதம்!
-
வீழ்ந்த சர்வாதிகாரம்.. “உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும்”: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!