Tamilnadu
தமிழுக்கு கலைஞர் ஆட்சி என்ன செய்தது என்று கேட்கும் அறிவிலிகளுக்கான பதில் இதோ..!
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளிக்காட்சி வாயிலாக உரையாற்றும்போது, தி.மு.க ஆட்சியில் முத்தமிழறிஞர் கலைஞர் தமிழுக்கு ஆற்றிய பணிகளைப் பட்டியலிட்டார்.
* நூற்றாண்டுக் கனவான செம்மொழித் தகுதியை தமிழுக்கு பெற்றுத் தந்தது கலைஞர் ஆட்சி!
* 'மெட்ராஸ்' என்ற பெயரை 'சென்னை' என ஆக்கியது!
* ஶ்ரீ,ஶ்ரீமதி என்ற சொல்லுக்கு பதிலாக திரு, திருமதி என்ற சொல்லை சட்டபூர்வம் ஆக்கியது!
* தலைநகரில் வள்ளுவர் கோட்டமும் கடல் நகரில் 133 அடியில் வள்ளுவர் சிலையும் அமைத்தது!
* திரும்பிய பக்கம் எல்லாம் திருக்குறளைத் தீட்டியது!
* தமிழ் வாழ்க என எழுத வைத்தது!
* சிலம்பின் பெருமையைக் காட்டும் பூம்புகார் கோட்டம் அமைத்தது!
* தமிழில் வழிபாடு செய்யும் உரிமையை வழங்கியது!
* ஆட்சிமொழியாய் தமிழை முழுமைப்படுத்தியது!
* தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மூலம் அனைத்துப் பாடங்களையும் தமிழில் மொழிபெயர்த்து 1000க்கும் மேற்பட்ட பாடப்புத்தகங்களை வெளியிட்டது!
* தமிழை கணினி மொழி ஆக்கியது!
* தமிழ் பயிற்று மொழிக்கான அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. இன்று பள்ளிக் கல்வி முதல் கல்லூரிக் கல்வி வரை தமிழில் படிக்கலாம்!
* ஆசிரியர்களுக்கு இணையானவர்களாக தமிழாசிரியர்களை ஆக்கியது. தமிழாசிரியர்களும் தலைமையாசியர் ஆகலாம் என உயர்த்தியது!
* உலகம் முழுவதும் தமிழைப் பரப்பியது!
* உலகத் தமிழ் மாநாட்டை நடத்தியது!
* உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்தியது!
* திராவிடப் பல்கலைக் கழகத்துக்கு நிதி வழங்கியது!
* தமிழறிஞர் நூல்களை எல்லாம் நாட்டுடமை ஆக்கியதும், அவர்களது குடும்பத்துக்கு இலட்சக்கணக்கில் நிதி உதவி செய்தது!
* தமிழ்நெட் இணைய மாநாட்டை 1999 இல் நடத்தியது!
* ஓலைச் சுவடி மொழியை அச்சு மொழியாகவும் ஆக்க அடித்தளம் அமைத்தது!
*செம்மொழி உயராய்வு நிறுவனத்தை அமைத்துத் தந்தார் தலைவர் கலைஞர் அவர்கள்.
அத்தகைய தமிழ் அரசை நடத்தியது தான் தி.மு.க அரசு!
அந்த வழியில் இன்றைய அரசும் தமிழரசாக நடந்து வருகிறது.
இவ்வாறு பட்டியலிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Also Read
-
3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை : முன்ஜாமீன் கோரிய முன்னாள் அமைச்சர் ரேவண்ணா - கர்நாடக அரசியலில் அதிர்ச்சி !
-
மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார் - மோடி கொல்கத்தா நேரத்தில் செல்லும் வெளிவந்த அதிர்ச்சி !
-
மீண்டும் மீண்டும் அவமானப்படும் மோடி! : பொய்களின் மேல் பொய்கள்!
-
"ரிங்கு சிங்கை அணியில் சேர்க்காதது மிகவும் கடினமான முடிவு" - தேர்வுக்குழு தலைவர் அகர்கர் கூறியது என்ன ?
-
தனியார்மயமாக்கலால் குறையும் அரசுப் பணிகள்! : மறைமுகமாக அழிக்கப்படும் இடஒதுக்கீடு!