Tamilnadu
“8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தலைமறைவான தந்தை” : போலிஸார் வலை வீச்சு - நடந்தது என்ன ?
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகேயுள்ள அத்திகுண்டா கிராமத்தை சேர்ந்தவர் நேரு (45) கூலி தொழிலாளி. இருவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தையும் 8 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த அவரது 8 வயது மகளிடம் தந்தை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்ப்பக்கத்தினர் வருவதற்க்குள் நேரு அங்கிருந்து இருந்து தப்பி சென்றுள்ளார்.
தகவலறிந்த அவரது தாய் சிறுமியை கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். இது குறித்து குழந்தையின் தாய் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து புகாரின் அடிப்படையில் தலைவமறைவாக உள்ள நேருவை போலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
வேப்பனபள்ளி அருகே 8 வயது சிறுமியை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தவெக அரசின் தனித்தீர்மானத்தால் எதுவும் செய்யமுடியாது; தமிழ்த்தாயையுமா ஏமாற்ற வேண்டும்? : முரசொலி காட்டம்!
-
காவிரி விவகாரம் ; பேச்சுவார்த்தை என்ற பெயரில் ஒருபோதும்... : தவெக அரசுக்கு வலியுறுத்திய ஓ.பன்னீர்செல்வம்!
-
விமர்சனத்தைச் சகித்துக் கொள்வார்களா? ஜனநாயகத்தில் நம்பிக்கை இருக்கிறதா?: தவெக அரசுக்கு இந்து ராம் கேள்வி!
-
‘ஜனநாயகன்’ ரிலீஸ் புரமோஷனுக்காகத் தான் கர்நாடகா செல்லவே திட்டமிட்டாரா விஜய்? : முரசொலி தலையங்கம்!
-
“எவ்வளவு தமிழ் படித்தாலும் தெரியாது!” : சட்டப்பேரவையில் மரிய வில்சன் சர்ச்சை பேச்சு!