Tamilnadu
“8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தலைமறைவான தந்தை” : போலிஸார் வலை வீச்சு - நடந்தது என்ன ?
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகேயுள்ள அத்திகுண்டா கிராமத்தை சேர்ந்தவர் நேரு (45) கூலி தொழிலாளி. இருவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தையும் 8 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த அவரது 8 வயது மகளிடம் தந்தை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்ப்பக்கத்தினர் வருவதற்க்குள் நேரு அங்கிருந்து இருந்து தப்பி சென்றுள்ளார்.
தகவலறிந்த அவரது தாய் சிறுமியை கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். இது குறித்து குழந்தையின் தாய் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து புகாரின் அடிப்படையில் தலைவமறைவாக உள்ள நேருவை போலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
வேப்பனபள்ளி அருகே 8 வயது சிறுமியை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ஒரே மாதத்தில் 46,122 தெருநாய்களுக்கு தடுப்பூசி.. சென்னை மாநகராட்சி தகவல்! - முழு விவரம் உள்ளே!
-
“இளையராஜா மீது முதலமைச்சர் பாசம் வைத்ததற்கு இதுதான் காரணம்...” - முரசொலி தலையங்கம் நெகிழ்ச்சி!
-
நிதி நிறுவன மோசடி வழக்கு... பாஜக கூட்டணியை சேர்ந்த தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் !
-
“நிலவில் முதலில் கால் வைத்தது பாட்டிதான் என்றுகூட சொல்வார்கள்!” : பாஜக-வினரை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்! : சென்னை மாநகராட்சி தகவல்!