Tamilnadu
”தொடர்ந்து 3வது முறையா ஜெயிச்சுட்டேன்; ரொம்ப பெருமையா இருக்கு” - மாடுபிடி வீரர் பிரபாகரன் நெகிழ்ச்சி!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல்தியாகராஜன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்கள். ஆட்சியர் அனீஷ் சேகர், எம்பி சு. வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முதலில் கோயில்கள் மற்றும் ஊர் மரியாதை காளைகள் அவிழ்த்து விடப்பட்டு பின்னர் பிற காளைகள் வாடி வாசலில் இருந்து சீறிப்பாய்ந்தன.
7 சுற்றுகளாக மாலை 5 மணிவரை நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரையில் உள்ள பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் 21 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார்.
பிரபாகரனுக்கு உதயநிதி ஸ்டாலின் சார்பில் இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. 11 காளைகளை அடக்கி இரண்டாமிடம் வந்த மாடுபிடி வீரர் கார்த்திக் ராஜாவுக்கு எல்.இ.டி. டிவி பரிசாக வழங்கப்பட்டது,
இதனையடுத்து ஜல்லிக்கட்டுப் போட்டியில் முதலிடம் பிடித்த பிரபாகரன் செய்தியாளர்களை சந்தித்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
அப்போது, தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடம் பிடித்திருப்பது பெருமையாக இருக்கிறது. ஆனால் மாடுகள் எல்லாம் முழு ஆற்றலோடு இருந்ததால் காளைகளை அடக்குவதில் சவாலாக இருந்தது எனக் கூறியுள்ளார்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!