Tamilnadu
”தொடர்ந்து 3வது முறையா ஜெயிச்சுட்டேன்; ரொம்ப பெருமையா இருக்கு” - மாடுபிடி வீரர் பிரபாகரன் நெகிழ்ச்சி!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல்தியாகராஜன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்கள். ஆட்சியர் அனீஷ் சேகர், எம்பி சு. வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முதலில் கோயில்கள் மற்றும் ஊர் மரியாதை காளைகள் அவிழ்த்து விடப்பட்டு பின்னர் பிற காளைகள் வாடி வாசலில் இருந்து சீறிப்பாய்ந்தன.
7 சுற்றுகளாக மாலை 5 மணிவரை நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரையில் உள்ள பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் 21 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார்.
பிரபாகரனுக்கு உதயநிதி ஸ்டாலின் சார்பில் இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. 11 காளைகளை அடக்கி இரண்டாமிடம் வந்த மாடுபிடி வீரர் கார்த்திக் ராஜாவுக்கு எல்.இ.டி. டிவி பரிசாக வழங்கப்பட்டது,
இதனையடுத்து ஜல்லிக்கட்டுப் போட்டியில் முதலிடம் பிடித்த பிரபாகரன் செய்தியாளர்களை சந்தித்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
அப்போது, தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடம் பிடித்திருப்பது பெருமையாக இருக்கிறது. ஆனால் மாடுகள் எல்லாம் முழு ஆற்றலோடு இருந்ததால் காளைகளை அடக்குவதில் சவாலாக இருந்தது எனக் கூறியுள்ளார்.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!