Tamilnadu
“70 ரூபாய் திருடிய மகளை தாக்கிய தாய்.. கொடூர தண்டனையால் நடந்த விபரீதம்” : பதற வைக்கும் ‘பகீர்’ சம்பவம் !
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை பகுதியைச் சேர்ந்தவர் மணிமேகலை. இவரது மகள் மகாலட்சுமி. இவர் தனது பெரியப்பா வீட்டிற் சென்றுள்ளார். அப்போது, அவரது வீட்டில் ரூ.70 திருடி தின்பண்டங்கள் வாங்கி சாப்பிட்டுள்ளார். இதைக் கண்டுபிடித்த சிறுமியின் தாய் மகாலட்சுமி அவரை கடுமையாக அடித்துத் திட்டியுள்ளார்.
மேலும், மகளுக்கு இனி திருடும் நினைப்பே வரக்கூடாது என நினைத்து அவருக்கு தண்டனையாகச் சூடு வைத்துள்ளார். அதுபோதாது என்று மிளகாய் புகையைச் சுவாசிக்கச் செய்துள்ளார்.
இதனால் சிறுமி மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். உடனே அவரை பெற்றோர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுமி மகாலட்சுமி சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி திருடியதால் அவரது தாய் சூடு வைத்ததில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!