Tamilnadu
பள்ளி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. 10 பேருக்கு தொடர்பு ? - அண்ணன் உட்பட 3 பேர் போக்சோவில் கைது!
விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி தாலுகா ஈச்சங்குப்பம் கிராமத்தை சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவி தன்னுடைய பெற்றோர் இறந்து விட்டதால் அவருடைய பெரியம்மா ஆதரவில் வளர்க்கப்பட்டார். இவர் பத்தாம் வகுப்பு வரை விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில், கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஈச்சங்குப்பம் கிராமத்திலுள்ள தன் பெரியம்மா வீட்டில் வசித்து 11 வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்படவே அவருடைய பெரியம்மா சிறுமியை முண்டிய பாக்கம் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெரியம்மா செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த செஞ்சி அனைத்து மகளிர் காவல் துறையினர் பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில், பள்ளி மாணவியின் பெரியம்மா மகன் மோகன்(32), அதே கிராமத்தை சேர்ந்த முதியவர் மண்ணாங்கட்டி (எ) வெங்கடேசன் (77) மற்றும் இளையராஜா (28) ஆகிய 3 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
ஆனால் பள்ளி சிறுமியை 10-க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியான தகவலையடுத்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா செஞ்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில், 2 மணி நேரத்துக்கு மேலாக தீவிர விசாரணை மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவராஜ் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நள்ளிரவில் தீவிர விசாரணை மேற்கொண்டார். காவல் உயரதிகாரிகள் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அடுத்தடுத்த விசாரணை மேற்கொண்டதால் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையம் பரபரப்புடன் காணப்பட்டது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!