Tamilnadu
அரசுவேலை ஆசைக்காட்டி ₹4.5 லட்சம் அபேஸ்: திருப்பத்தூரில் பெண்ணிடம் மோசடியில் ஈடுபட்டவர் பிடிபட்டது எப்படி?
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செவ்வாத்தூர் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் தேன்மொழி. சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த போது கடந்த 2018-ம் ஆண்டு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ராஜேஷ் என்பவர் பல்வேறு தவணைகளாக 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுள்ளார்.
வேலையும் வாங்கி தராமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் அலைக்கழித்து வந்த ராஜேஷிடம் இதுகுறித்து தேன்மொழி கேட்டுள்ளார்.
அப்போது, தாம் உதயநிதி ஸ்டாலினின் உதவியாளர் என பொய்க் கூறி மிரட்டியுள்ளார். இதனையடுத்து காவல்துறையில் தேன்மொழி புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கந்திலி காவல்துறையினர், ராஜேஷை கைது செய்துள்ளனர்.
ராஜேஷ், உதயநிதி ஸ்டாலினின் உதவியாளர் இல்லை என்றும், எந்த அரசியல் கட்சியையும் சேராதவர் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராஜேஷ், பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!