Tamilnadu
பணம் வராததால் ஆத்திரம் .. ATM எந்திரத்தை உடைத்த இளைஞர்கள்... சுற்றி வளைத்த போலிஸ் - நடந்தது என்ன?
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சந்திர சேகர் பூவே, பிருந்தாவன் பகார்த்தி. இவர்கள் இருவரும் கோவை ராக்கிபாளையம் பகுதியில் கூலித் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் இருவரும் ராக்கிபாளையம் பகுதியில் உள்ள ஏ.டி.எம் எந்திரத்தில் பணம் எடுக்கச் சென்றனர். அப்போது பணம் வராததால் ஆத்திரமடைந்த இருவரும் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்துள்ளனர்.
இதையடுத்து, ஏ.டி.எம் எந்திரம் உடைக்கப்பட்டதால் மும்பையில் உள்ள வங்கிக்கு எச்சரிக்கை சென்றது. உடனே போலிஸாருக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் போலிஸார் அங்கு வந்து பார்த்தபோது ஏ.டி.எம் மையத்தில் யாரும் இல்லை.
பின்னர், சற்று தள்ளி நின்றிருந்த இவர்களிடம் போலிஸார் விசாரணை நடத்தினர். அப்போது பணம் வராததால் எந்திரத்தை உடைத்ததாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து போலிஸார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!