Tamilnadu

ஜோராக நடக்கும் பொங்கல் தொகுப்பு விநியோகம்; மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்.. இணையத்தை வென்ற புகைப்படங்கள்!

தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை முன்னிட்டு, தமிழ்நாட்டு மக்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பொங்கல் தொகுப்பை வாங்கிக்கொண்டு மகிழ்ச்சியுடன் செல்லும் மக்களை புகைப்படக் கலைஞரான ஜாக்சன் ஹெர்பி எடுத்த புகைப்படம் இணையத்தை வென்றுள்ளது.

முன்னதாக திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் நிறைவேற்றப்பட்ட முதல் ஐந்து திட்டங்களில் ஒன்றான கொரோனா நிவாரணை தொகையை பெற்ற மூதாட்டிகளின் புகைப்படங்களையும் ஜாக்சன் ஹெர்பிதான் எடுத்திருந்தார்.

Also Read: தனக்கு வந்த கொரோனா நிவாரண தொகையை வைரல் பாட்டிக்கு அளித்த புகைப்படக் கலைஞர் - நாகர்கோவிலில் நெகிழ்ச்சி!