Tamilnadu
நடுவீதியில் 4 வயது சிறுமியை கடித்து குதறிய தெருநாய்கள்.. காண்போரை பதைபதைக்க வைக்கும் காட்சிகள்! (VIDEO)
மத்திய பிரதேசம் மாநிலம் தலைநகர் போபாலின் பாக் செவானியா பகுதியில், கூலித் தொழிலாளியின் 4 வயது மகள் வீட்டிற்கு வெளியே தனியாக விளையாடிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கிருந்த 4 தெருநாய்கள் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை திடீரென துரத்தியுள்ளது. இதனால் அச்சமடைந்த அச்சிறுமி அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார். ஆனால் வெறியில் இருந்த தெருநாய்கள் சிறுமியை விடாமல் துரத்துச் சென்றுக் கடிக்கத் தொடங்கியது.
இதில், சிறுமி தவறி கிழே விழுந்தநிலையில், நாய்கள் சுற்றி வளைத்து கடித்து குதற துவங்கியுது. இதனியே அவ்வழியாக வந்த இளைஞர் ஒருவர் நாய்கள் சிறுமியைக் கடிப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, விரைந்து செயல்பட்டு கல்லை வீசி நாய்களை விரட்டியடித்தார்.
பின்னர் சிறுமியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். காண்போரை பதைபதைக்க செய்ய வைக்கும் இந்த சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளது.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!