Tamilnadu
நடுவீதியில் 4 வயது சிறுமியை கடித்து குதறிய தெருநாய்கள்.. காண்போரை பதைபதைக்க வைக்கும் காட்சிகள்! (VIDEO)
மத்திய பிரதேசம் மாநிலம் தலைநகர் போபாலின் பாக் செவானியா பகுதியில், கூலித் தொழிலாளியின் 4 வயது மகள் வீட்டிற்கு வெளியே தனியாக விளையாடிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கிருந்த 4 தெருநாய்கள் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை திடீரென துரத்தியுள்ளது. இதனால் அச்சமடைந்த அச்சிறுமி அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார். ஆனால் வெறியில் இருந்த தெருநாய்கள் சிறுமியை விடாமல் துரத்துச் சென்றுக் கடிக்கத் தொடங்கியது.
இதில், சிறுமி தவறி கிழே விழுந்தநிலையில், நாய்கள் சுற்றி வளைத்து கடித்து குதற துவங்கியுது. இதனியே அவ்வழியாக வந்த இளைஞர் ஒருவர் நாய்கள் சிறுமியைக் கடிப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, விரைந்து செயல்பட்டு கல்லை வீசி நாய்களை விரட்டியடித்தார்.
பின்னர் சிறுமியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். காண்போரை பதைபதைக்க செய்ய வைக்கும் இந்த சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளது.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!