Tamilnadu
நேற்று போல் இன்றும் கொட்டித் தீர்க்குமா மழை..? - வானிலை ஆய்வு மையம் கூறுவது என்ன?
சென்னையில் நேற்று திடீரென தொடங்கி 10 மணி நேரத்திற்கும் மேல் மழை கொட்டித் தீர்த்த நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்குக் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை வருமாறு: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும். மேலும் நாகை மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய அதிகனமழை பெய்யக்கூடும்.
கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
ஜனவரி 2ஆம் தேதியிலிருந்து 4ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை ஒருசில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் பயணிகளின் கவனத்துக்கு: இ-பாஸ் விவரத்தை வெளியிட்ட தமிழ்நாடு அரசு !
-
குஜராத்தில் மோடி போட்டியிடுவாரா? : விடையற்று போன பா.ஜ.க!
-
”பழைய இந்து சட்டத்தை உயிர்ப்பிக்கின்ற தீர்ப்பு” : உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கி.வீரமணி கண்டனம்!
-
+2 தேர்வு : எந்தெந்த மாவட்டங்கள் எத்தனை சதவீதம் தேர்ச்சி? - புள்ளி விவரங்களோடு பட்டியல் வெளியீடு !
-
12-ம் வகுப்பு பொதுத் தேர்வு : தேர்ச்சி பெற்ற டாப் 3 மாவட்டங்கள் - பட்டியல் இதோ !