Tamilnadu
நேற்று போல் இன்றும் கொட்டித் தீர்க்குமா மழை..? - வானிலை ஆய்வு மையம் கூறுவது என்ன?
சென்னையில் நேற்று திடீரென தொடங்கி 10 மணி நேரத்திற்கும் மேல் மழை கொட்டித் தீர்த்த நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்குக் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை வருமாறு: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும். மேலும் நாகை மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய அதிகனமழை பெய்யக்கூடும்.
கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
ஜனவரி 2ஆம் தேதியிலிருந்து 4ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை ஒருசில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியடைந்த தமிழ்நாடு!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!
-
10.1 கி.மீ நீளம் - 10 நிமிட பயணம்! : ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலக புத்தொழில் மாநாடு - 2025 : கோவையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”எங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பு எடுக்காதீர்கள்” : பழனிசாமிக்கு பதிலடி தந்த அமைச்சர் எ.வ.வேலு!
-
முதலமைச்சர் கோப்பை : ‘பூப்பந்து விளையாட்டு’ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை!