Tamilnadu
25 பவுன் நகை திருட்டு.. கைரேகை சிக்காமல் இருக்க வீட்டிற்குத் தீவைத்த கொள்ளை கும்பல் - பின்னணி என்ன?
திண்டுக்கல் மாவட்டம், திருநகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன். இவர் திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த 25 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துள்ளனர்
பின்னர், போலிஸிடம் கைரேகை சிக்காமல் இருப்பதற்காக மர்ம நபர்கள் வீட்டிற்குத் தீவைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து மணிமாறன் வீடு எரிந்ததைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனே தீயணைப்புத் துறைக்குத் தகவல் தொடுத்துள்ளனர்.
பிறகு அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதில் வீட்டிலிருந்து கட்டில், மெத்தை, கணினி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகின. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து, நகையைக் கொள்ளையடித்து விட்டு வீட்டிற்கு தீ வைத்துத் தப்பிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!