Tamilnadu
25 பவுன் நகை திருட்டு.. கைரேகை சிக்காமல் இருக்க வீட்டிற்குத் தீவைத்த கொள்ளை கும்பல் - பின்னணி என்ன?
திண்டுக்கல் மாவட்டம், திருநகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன். இவர் திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த 25 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துள்ளனர்
பின்னர், போலிஸிடம் கைரேகை சிக்காமல் இருப்பதற்காக மர்ம நபர்கள் வீட்டிற்குத் தீவைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து மணிமாறன் வீடு எரிந்ததைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனே தீயணைப்புத் துறைக்குத் தகவல் தொடுத்துள்ளனர்.
பிறகு அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதில் வீட்டிலிருந்து கட்டில், மெத்தை, கணினி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகின. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து, நகையைக் கொள்ளையடித்து விட்டு வீட்டிற்கு தீ வைத்துத் தப்பிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
551 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பாட்டா... 5,000 மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சர் அசத்தல்!
-
எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க அதிரடி நடவடிக்கை - சிறப்பு முயற்சிகள் எடுத்த திராவிட மாடல் அரசு!
-
“நெல் சாகுபடியில் சாதனை... நெல் கொள்முதல் இலக்கினை உயர்த்த வேண்டும்” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
5 ஆண்டுகளில் TNPSC, தேசிய நலவாழ்வு குழுமம் மூலம் 48,418 பேருக்கு பணி ஆணை:அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
அரசுக் கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 5 உதவிப் பேராசிரியர்கள் : பணி ஆணைகளை வழங்கிய முதலமைச்சர்!