Tamilnadu
25 பவுன் நகை திருட்டு.. கைரேகை சிக்காமல் இருக்க வீட்டிற்குத் தீவைத்த கொள்ளை கும்பல் - பின்னணி என்ன?
திண்டுக்கல் மாவட்டம், திருநகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன். இவர் திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த 25 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துள்ளனர்
பின்னர், போலிஸிடம் கைரேகை சிக்காமல் இருப்பதற்காக மர்ம நபர்கள் வீட்டிற்குத் தீவைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து மணிமாறன் வீடு எரிந்ததைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனே தீயணைப்புத் துறைக்குத் தகவல் தொடுத்துள்ளனர்.
பிறகு அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதில் வீட்டிலிருந்து கட்டில், மெத்தை, கணினி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகின. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து, நகையைக் கொள்ளையடித்து விட்டு வீட்டிற்கு தீ வைத்துத் தப்பிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!