Tamilnadu
“ஆளில்லாத வீடுதான் டார்க்கெட்.. 13 வீடுகளில் தொடர் திருட்டு” : வாகன சோதனையில் கொள்ளையன் சிக்கியது எப்படி?
சென்னை ஐ.சி.எஃப் பகுதியில் போலிஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் போலிஸாரை கண்டதும், வாகனத்தை விட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதைப்பார்த்த போலிஸார் உடனே அவரை துரத்திச் சென்று பிடித்தனர். அப்போது அந்த நபரிடம் கத்தி, சுத்தியல் போன்ற ஆயுதங்கள் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த போலிஸார் அவரை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
இதில், ஓட்டேரியைச் சேர்ந்த ஜெபராஜ் என்பதும், பூட்டிய வீடுகளைக் கூறிவைத்துத் தொடர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. மேலும் 13 வீடுகளில் கைவரிசை காட்டியதாகவும் போலிஸாரிடம் ஜெபராஜ் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதையடுத்து அவரிடம் இருந்து 95 சவரன் நகைகளை போலிஸார் பறிமுதல் செய்தனர். பிறகு அவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“பா.ஜ.க-வின் ஊதுகுழல் அன்புமணி” : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடும் விமர்சனம்!
-
“சனாதனத்தின் வேர்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறுத்தெறிவார்” : திண்டுக்கல் ஐ.லியோனி பேச்சு!
-
இளம்பெண்களின் கவனத்திற்கு... விலையில்லா கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி.. எப்போது செலுத்தப்படும்?
-
“அங்கன்வாடிகளை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்...” - திமுக எம்.பி. கிரிராஜன் வலியுறுத்தல்!
-
GSDP வளர்ச்சியில் 16% -தமிழ்நாடு Number One; அதுதான் திராவிட மாடல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!