Tamilnadu
வைரத்துக்கு அப்டேட்டான கடத்தல்காரர்கள்; ஏர்போர்ட்டில் ₹5.76 கோடி மதிப்பு வைரக்கற்கள் சிக்கியதன் பின்னணி?
துபாய் செல்லும் எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானம் சென்னை சா்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளையும், அவா்கள் உடமைகளையும் சுங்கத்துறையினா் சோதித்து அனுப்பினா்.
அப்போது சென்னையை சோ்ந்த 30 வயது ஆண் பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை தடுத்து விசாரித்தனா். அதோடு அவருடைய சூட்கேஸ், பைகளை சோதனையிட்டனா். அதில் டெலஸ்கோப்கள் 4 வைத்திருந்தாா்.
அந்த டெலஸ்கோப்புகளின் கைப்பிடிகளுக்குள் 22 சிறிய பிளாஸ்டிக் பைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அந்த பிளாஸ்டிக் பைகளில் பட்டை தீட்டப்பட்டு மெருகூட்டப்பட்ட வைரக்கற்கள் இருந்ததை கண்டுப்பிடித்தனா். மொத்தம் 1052 காரட் வைரக்கற்கள் இருந்தன. அவைகளின் மதிப்பு ரூ.5.76 கோடி.
இதையடுத்து சுங்கத்துறையினர் அந்த பயணியிடமிருந்த வைரக்கற்களை பறிமுதல் செய்தனா். அதோடு அவரின் பயணத்தை ரத்து செய்து, வைரம் கடத்திய பயணியை கைது செய்து மேலும் விசாரணை நடத்தினர்.
ஆப்ரிக்கா நாடுகளில் கிடைக்கும் பட்டை தீட்டப்படாத வைரக்கற்களை இந்தியாவிற்கு கடத்தி வந்து,இங்கு பட்டை தீட்டி பாலீஸ் போட்டு,மெருகூட்டி மீண்டும் வெளிநாட்டிற்கு கடத்த முயன்றபோது பிடிப்பட்டுள்ளதாக தெரியவந்தது.
இதைப்போல் பட்டை தீட்டப்படாத 718 காரட் வைரக்கற்களை காங்கோ நாட்டிலிருந்து சென்னைக்கு கடத்தி வந்த மும்பை வாலிபரை டிஆா்ஐயும், சுங்கத்துறையினரும் இணைந்து கைது செய்தனா்.
அவரிடம் நடத்திய விசாரணையில் அவா் கொடுத்த தகவலின் பேரில் இந்த வைரக்கற்கள் பிடிப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் வழக்கமாக தங்கம், கரண்சி, போதைப்பொருட்கள்தான் அதிக அளவில் கடத்தப்பட்டு வந்தன. தற்போது பெருமளவு வைரக்கற்கள் பிடிப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!