Tamilnadu
“13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை” : மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
திருப்பூரில் ஏழாவது பயிலும் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கூலித் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் குமாரானந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வம்(50) கூலி தொழிலாளி. இவர் கடந்த ஆண்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் 7ம் வகுப்பு பயிலும் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
தனக்கு நடந்தது பற்றி சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து விசாரணை நடத்திய அனைத்து மகளிர் போலிஸார் போக்சோ சட்டத்தின் கீழ் செல்வத்தை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு திருப்பூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது இதனிடையே இந்த வழக்கின் விசாரணை முடிந்து நீதிபதி சுகந்தி இன்று தீர்ப்பளித்தார். அதில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கூலி தொழிலாளி செல்வத்துக்கு ஆயுள் தண்டனை விதித்தும் ரூ 5 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!