Tamilnadu
“ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி” : பயணிகள் கண் முன்னே நடந்த ‘பகீர்’ சம்பவம் !
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயகுமார். இவர் சென்னையில் வேலைபார்த்து வந்தார். இவரும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சரண்யாஸ்ரீ என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.
இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் சில நாட்களாகக் காதல் ஜோடிகள் மனமுடைந்து காணப்பட்டுள்ளனர். இதையடுத்து இவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
பின்னர், சென்னை - அரக்கோணம் விரைவு பாதையில் வந்த ரயில் முன்பு பாய்ந்து காதல் ஜோடிகள் தற்கொலை செய்து கொண்டனர். இதனைக் கண்ட சில பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளன. பின்னர் இதுகுறித்து ரயில்வே போலிஸாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.
பிறகு அங்கு வந்த ரயில்வே போலிஸார் இருவரது சடலத்தையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
46 முதலீட்டுத் திட்டங்களுக்கு ஊக்கச்சலுகைகள்... அமைச்சரவை கூட்டத்தில் நடந்தது என்ன?
-
வெளியான வாக்காளர் இறுதிப்பட்டியல்... உங்கள் பெயர் உள்ளதா? - முழு விவரம் தெரிந்து கொள்ளுங்கள்!
-
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான தோல்வி: இந்திய அணியில் மாற்றம் நிகழுமா? அரையிறுதிக்கு செல்லுமா இந்தியா?
-
“உங்கள் தூக்கத்தை கெடுத்த surgical strike” - பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
முதல் நாளே 120 தொகுதிகள்... வீடு வீடாக பரப்புரை... களத்தில் இறங்கியது ஸ்டாலினின் மகளிர் படை!