Tamilnadu
“ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி” : பயணிகள் கண் முன்னே நடந்த ‘பகீர்’ சம்பவம் !
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயகுமார். இவர் சென்னையில் வேலைபார்த்து வந்தார். இவரும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சரண்யாஸ்ரீ என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.
இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் சில நாட்களாகக் காதல் ஜோடிகள் மனமுடைந்து காணப்பட்டுள்ளனர். இதையடுத்து இவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
பின்னர், சென்னை - அரக்கோணம் விரைவு பாதையில் வந்த ரயில் முன்பு பாய்ந்து காதல் ஜோடிகள் தற்கொலை செய்து கொண்டனர். இதனைக் கண்ட சில பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளன. பின்னர் இதுகுறித்து ரயில்வே போலிஸாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.
பிறகு அங்கு வந்த ரயில்வே போலிஸார் இருவரது சடலத்தையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
திருத்தணி வட மாநில இளைஞர் தாக்கப்பட்ட விவகாரம் : நடந்தது என்ன? - வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் விளக்கம்!
-
“கோவை மக்களுக்கு 2026 புத்தாண்டுக்கான பரிசு இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
கோவையில் 11,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய துணை முதலமைச்சர் : புதிய திட்டங்களுக்கு அடிக்கல்!
-
VBG RAMG சட்டத்தை எதிர்க்கும் பஞ்சாப் : சட்டமன்றத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடிவு!
-
புத்தாண்டு கொண்டாட ஊருக்கு போறீங்களா?... : அப்போ உங்களுக்கான செய்திதான் இது!