Tamilnadu
சாக்கு மூட்டையில் அழுகிய நிலையில் இருந்த சிறுமியின் உடல்.. நகைக்காக நடந்த கொலை: விசாரணையில் பகீர் தகவல்!
கோவை சரவணம்பட்டி பகுதியில் சாக்கு மூட்டையில் அழுகி நிலையில் சிறுமியின் சடலத்தை போலிஸார் மீட்டனர். இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில், உயிரிழந்த சிறுமி டிசம்பர் 11ம் தேதியிலிருந்து காணவில்லை என மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினார்கள்.
இதையடுத்து போலிஸார் சிறுமியின் தாய் மற்றும் உறவினர்களிடம் விசாரணை செய்தனர். அப்போது சிறுமியின் தாய் கலைவாணியின் நெருக்கிய நண்பர் முத்துக்குமார் என்பவர் நகைக்காக அவரை கொலை செய்தது தெரியவந்தது.
சிறுமியின் தாய் கலைவாணியும், முத்துக்குமாரும் மூன்று ஆண்டுகளாக நண்பர்களான நெருங்கிப் பழகிவந்துள்ளனர். இதனால் முத்துக்குமாரிடமிருந்து இரண்டரை பவுன் தங்க நகையைக் கலைவாணி வாங்கியுள்ளார்.
பின்னர், இதைத் திருப்பி கேட்டபோது இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தனது மகளிடம் இருக்கும் நகைகை வாங்கி தருவதாக முத்துக்குமாரிடம் கலைவாணி தெரிவித்துள்ளார்.
இதனால் சிறுமியை வீட்டிற்கு அழைத்து நகையைக் கேட்டுள்ளார் முத்துக்குமார். அப்போது சிறுமி அவரிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது அவரின் கழுத்தை நெரித்து முத்துக்குமார் கொலை செய்துள்ளார்.
பிறகு, சிறுமியின் சடலத்தைச் சாக்கு மூட்டையில் கட்டி குட்டையில் வீசியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் முத்துக்குமாரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !
-
பள்ளிக்கல்வி எனும் அடித்தளத்திற்கு வலுசேர்க்கும் திராவிட மாடல் திட்டங்கள்! : பட்டியலிட்ட தமிழ்நாடு அரசு!
-
தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு.. சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்!