Tamilnadu
வீடு வாடகைக்கு எடுத்து சூதாடிய கும்பல்.. 11 பெண்கள் உட்பட 12 பேரை சுற்றிவளைத்த போலிஸ் : நடந்தது என்ன?
சென்னை சேத்துப்பட்டு, எஸ்.எம். நகர் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெற்று வருவதாக போலிஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலிஸார் அப்பகுதியில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு வீட்டில் 11 பெண்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தைப் பார்த்து போலிஸார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் வீடு வாடகைக்கு எடுத்து நீண்ட நாட்களாகப் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து 11 பெண்கள் உட்பட 12 பேரை போலிஸார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ரூ.18 680ஐ பறிமுதல் செய்தனர். பெண்கள் மட்டும் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் சேத்துப்பட்டு பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!