Tamilnadu
வாட்ஸ் அப்பில் வீடியோ ஷேர் செய்ததால் கொலை மிரட்டல்; சென்னை அயனாவரத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கிய நாதன் என்ற தாஸ். இவர், நேற்று இரவு அயனாவரம் திருவள்ளுவர் நகர் அம்பேத்கர் மன்றம் அருகில் நின்று கொண்டிருந்தபோது ஹரி என்பவர் மேற்குறிப்பிட்ட புகார்தாரரிடம் சென்று கொளத்தூர் காவல் நிலையத்தில் வழிப்பறி வழக்கில் சிறைக்குச் சென்ற வீடியோவை எடுத்து வாட்ஸ்அப் குரூப்பில் செய்தி பரப்பியதாக கத்தியை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்ற ஹரி (31) மீது கொளத்தூர் காவல் நிலையத்தில் வழிப்பறி வழக்கு உள்ளது. இவரை பிடித்து அயனாவரம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவரோடு சேர்த்து மிரட்டிய ஆகாஷ் மற்றும் அவரது நண்பர் என இருவரையும் தேடி வருகின்றனர்.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!