Tamilnadu
வாட்ஸ் அப்பில் வீடியோ ஷேர் செய்ததால் கொலை மிரட்டல்; சென்னை அயனாவரத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கிய நாதன் என்ற தாஸ். இவர், நேற்று இரவு அயனாவரம் திருவள்ளுவர் நகர் அம்பேத்கர் மன்றம் அருகில் நின்று கொண்டிருந்தபோது ஹரி என்பவர் மேற்குறிப்பிட்ட புகார்தாரரிடம் சென்று கொளத்தூர் காவல் நிலையத்தில் வழிப்பறி வழக்கில் சிறைக்குச் சென்ற வீடியோவை எடுத்து வாட்ஸ்அப் குரூப்பில் செய்தி பரப்பியதாக கத்தியை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்ற ஹரி (31) மீது கொளத்தூர் காவல் நிலையத்தில் வழிப்பறி வழக்கு உள்ளது. இவரை பிடித்து அயனாவரம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவரோடு சேர்த்து மிரட்டிய ஆகாஷ் மற்றும் அவரது நண்பர் என இருவரையும் தேடி வருகின்றனர்.
Also Read
-
5 மாநில தேர்தல் : ஆட்சியை பிடிக்கப்போவது யார்? : வெளியான Exit Polls முடிவுகள்!
-
தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க கூட்டணியே ஆட்சி அமைக்கும்: உறுதி செய்த Exit Polls முடிவுகள்!
-
இஸ்லாமியச் சிறுமிக்கு இந்து பெற்றோர் : உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு!
-
பா.ஜ.க ஆளும் மாநிலத்தின் அவலம் - உயிருக்குப் போராடிய கணவர்: மனைவிக்கு நேர்ந்த கொடூரம்!
-
”தேர்தல் ஆணையமா ஆளுநர் ஆர்.என்.ரவி.. அமைதியாக நடக்கிறதா மேற்கு வங்க தேர்தல்?” : முரசொலி கேள்வி!