Tamilnadu
வாட்ஸ் அப்பில் வீடியோ ஷேர் செய்ததால் கொலை மிரட்டல்; சென்னை அயனாவரத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கிய நாதன் என்ற தாஸ். இவர், நேற்று இரவு அயனாவரம் திருவள்ளுவர் நகர் அம்பேத்கர் மன்றம் அருகில் நின்று கொண்டிருந்தபோது ஹரி என்பவர் மேற்குறிப்பிட்ட புகார்தாரரிடம் சென்று கொளத்தூர் காவல் நிலையத்தில் வழிப்பறி வழக்கில் சிறைக்குச் சென்ற வீடியோவை எடுத்து வாட்ஸ்அப் குரூப்பில் செய்தி பரப்பியதாக கத்தியை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்ற ஹரி (31) மீது கொளத்தூர் காவல் நிலையத்தில் வழிப்பறி வழக்கு உள்ளது. இவரை பிடித்து அயனாவரம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவரோடு சேர்த்து மிரட்டிய ஆகாஷ் மற்றும் அவரது நண்பர் என இருவரையும் தேடி வருகின்றனர்.
Also Read
-
தமிழ்நாடுக்கு திட்டங்களும் இல்லை! சிலிண்டரும் இல்லை! - தி.மு.க கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
-
ஜல் ஜீவன் மிஷன் திட்டத்திற்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குக: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
திராவிட மாடல் ஆட்சியில் 25 இலட்சம் பேருக்கு பட்டா! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்!
-
“ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் பெறக்கூடாது என்பது கொடூரமான சர்வாதிகார மனோபாவம்!” : முரசொலி தலையங்கம்!
-
அரசு உதவி வழக்குரைஞர் நிலை 2 பணி... தேர்வு செய்யப்பட்ட 45 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!