Tamilnadu
“Instagram-ல் போலி கணக்கு துவங்கி கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை” : இளைஞரைக் கைது செய்து போலிஸ் அதிரடி!
கோவை மாவட்டம் குனியமுத்தூர் மேட்டுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் நியாஸ். இளைஞரான இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண் போல போலியான ஒருபக்கத்தை உருவாக்கி, பல்வேறு பெண்களிடம் நட்பு ஏற்படுத்தியுள்ளார்.
இதில், திருப்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரிடம், பெண் குரலில் பேசி நட்பாகப் பழகி வந்துள்ளார். பின்னர் அந்த மாணவியின் புகைப்படங்களை வாங்கி அதை, ஆபாசமாகச் சித்தரித்து மீண்டும் அவருக்கே அனுப்பியுள்ளார்.
இதைப்பார்த்து, அந்த மாணவி அதிர்ச்சியடைந்துள்ளார். பிறகு மாணவிக்கு தொலைப்பேசியில் அழைத்து, நிர்வாணமாக வீடியோ கால் அழைப்பில் வர வேண்டும் இல்லை என்றால், இந்தப் புகைப்படங்களை இணையதளத்தில் பரப்பி விடுவதாக மிரட்டியுள்ளார் .
இது குறித்து கல்லூரி மாணவி திருப்பூர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நியாஸை கைது செய்தனர்.
மேலும் அவரது செல்போனை போலிஸார் ஆய்வு செய்தபோது, பல்வேறு இளம் பெண்களின் நிர்வாண போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து மேலும் கைதான நியாஸிடம் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!
-
சென்னையில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்கள் !
-
“மனித குலத்துக்கே செய்கின்ற ஒரு மாபெரும் தொண்டு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
தினமலரின் பொய் செய்தி! - அங்கன்வாடி மையங்கள் குறித்து விளக்கிய தமிழ்நாடு அரசு!
-
சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் மாபெரும் சாதனைகள்... பட்டியலை வெளியிட்டு தமிழ்நாடு அரசு பெருமிதம்!