Tamilnadu
"'மாநிலக் கல்விக் கொள்கை' - விரைவில் உருவாக்கப்படும்": அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுவது என்ன?
திருச்சி மாவட்ட ஆட்சியரின் நிதியின் கீழ் ரூ.9.60 லட்சம் மதிப்பில், பள்ளி மாணவிகளுக்குக் கையடக்க கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு மாணவிகளுக்குக் கணினிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,"அரசுப் பள்ளியில் சிறந்து விளங்கும் மாணவர்கள் உயர் கல்வி பெறுவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்றுதான் கணினி வழங்குவதும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பின் படி மாநிலக் கல்விக்கொள்கையை உருவாக்கும் திட்டம் உள்ளது. கடந்த வாரம் இது தொடர்பாக அதிகாரிகளுடனான கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கும் குழுவில் யார் யார் இடம் பெறுவார்கள் என்பது குறித்து முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து இறுதி அறிக்கை வரும். பிறகு விரைவில் மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கப்படும்.
தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் நமது நிலைப்பாடு தெரியும்.3, 5, 8 ஆகிய வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது சரியானது அல்ல" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் Fail : வெளிவந்த பாஜக ஆளும் ம.பி அரசுப் பள்ளியின் அவலம் !
-
பிரசார பாடலுக்கு தடை : ஆம் ஆத்மியை குறிவைக்கும் தேர்தல் ஆணையம் ? - குவியும் கண்டனம் !
-
"அமேதியில் ராகுலுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வேன்" - வயநாடு தொகுதி CPI வேட்பாளர் ஆனி ராஜா பேட்டி !
-
“சிறையில் அடைத்ததற்கு பதிலடி கொடுக்க வாக்களிப்போம்” - ஆம் ஆத்மியின் பிரசார பாடலுக்கு தேர்தல் ஆணையம் தடை!
-
குஜராத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 149 கிலோ போதைப்பொருள் : சீல் வைக்கப்பட்ட தயாரிப்பு ஆலை !