Tamilnadu
'தடுப்பூசி போட்டாச்சா?'... பேருந்தில் ஏறி மக்களிடம் தகவல்களைக் கேட்டறிந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
தமிழ்நாட்டில் இன்று 13வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் மையங்களில் நடைபெறுகிறது. இந்த முகாமில் 2வது தவணையாகத் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
மேலும் வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி போடும் பணியும் செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 80% பேர் முதல் தடுப்பூசியும், 45 % பேர் இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விழுப்புரம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் தடுப்பூசி தகவல்கள் பற்றிக் கேட்டறிந்தார்.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை விழுப்புரத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது விழுப்புரம் பேருந்து நிலையம் சென்ற அவர் பேருந்துகளில் ஏறி பொதுமக்களிடம் தடுப்பூசி செலுத்திக் கொண்டீர்களா என கேட்டறிந்தார்.
அப்போது, பொதுமக்களும் தடுப்பூசி செலுத்திக் கொண்ட விவரங்களை அவரிடம் கூறினர். அமைச்சரே நேரடியாக தடுப்பூசி செலுத்திக் கொண்டது குறித்துக் கேட்டது அப்பகுதி மக்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.
Also Read
-
“நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது” -முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வருத்தம்!
-
5வது மாடியில் இருந்து வீசப்பட்ட பேச்சிளம் குழந்தை... தாயை அதிரடியாக கைது செய்த போலீஸ் -விசாரணையில் பகீர்!
-
காணாமல் போன மோடி : காணவில்லை என சுவரொட்டி அடித்த மணிப்பூர் மக்கள்!
-
பிரசாரத்துக்கு சென்ற பாஜக வேட்பாளருக்கு எதிர்ப்பு: சம்பவ இடத்திலேயே விவசாயி பரிதாப பலி -குவியும் கண்டனம்!
-
“பெண்கள் என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாமா ?” - சவுக்கு மீடியா சங்கருக்கு மகளிர் காங்கிரஸ் கண்டனம் !