Tamilnadu
'தடுப்பூசி போட்டாச்சா?'... பேருந்தில் ஏறி மக்களிடம் தகவல்களைக் கேட்டறிந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
தமிழ்நாட்டில் இன்று 13வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் மையங்களில் நடைபெறுகிறது. இந்த முகாமில் 2வது தவணையாகத் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
மேலும் வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி போடும் பணியும் செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 80% பேர் முதல் தடுப்பூசியும், 45 % பேர் இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விழுப்புரம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் தடுப்பூசி தகவல்கள் பற்றிக் கேட்டறிந்தார்.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை விழுப்புரத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது விழுப்புரம் பேருந்து நிலையம் சென்ற அவர் பேருந்துகளில் ஏறி பொதுமக்களிடம் தடுப்பூசி செலுத்திக் கொண்டீர்களா என கேட்டறிந்தார்.
அப்போது, பொதுமக்களும் தடுப்பூசி செலுத்திக் கொண்ட விவரங்களை அவரிடம் கூறினர். அமைச்சரே நேரடியாக தடுப்பூசி செலுத்திக் கொண்டது குறித்துக் கேட்டது அப்பகுதி மக்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.
Also Read
-
“இவர்களெல்லாமா அமைச்சர்கள்.. இனி அடுத்த தேர்தலில் விட மாட்டோம்..” - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சூளுரை!
-
“இதையெல்லாம் செய்யணும்.. இல்லைனா பட்ஜெட் கூட்டத்தின்போது...” - தவெக அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை!
-
தூய்மை பணியாளரை இழிவு படுத்தும் தவெக... கண்டுகொள்ளாத காவல்துறை.. தொடரும் கொடுமைகள்!
-
மகளிர் டி20: யாருக்கு உலகக் கோப்பை.. ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா.. தட்டிப்பறிக்குமா இங்கிலாந்து!
-
சர்வதேச அளவில் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் தொடக்கம்.. சச்சினை முந்திய வரலாற்று நிகழ்வு : முழு தகவல் அறிய!