Tamilnadu
“டிசம்பரிலும் மழை வெளுக்கப்போகுது..” : முன்கூட்டியே அறிவித்த இந்திய வானிலை ஆய்வு மையம்!
இந்தாண்டு டிசம்பர் மாதத்தில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு இருக்கும் என்றும், 132% மேல் என்ற அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நடப்பு ஆண்டு பருவமழை அதிகமாகவே பெய்து வருகிறது. வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் நவம்பர் மாதம் கொட்டித் தீர்த்தது. இதனால், தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. சென்னை உள்ளிட்ட பல இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வடகிழக்குப் பருவமழை டிசம்பர் மாதத்திற்கான நீண்டகால முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில் இந்தாண்டு வடகிழக்குப் பருவமழை டிசம்பர் மாதத்தில் நீண்ட கால சராசரியை விட கூடுதலாக பெய்யக்கூடிய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இயல்பாக டிசம்பர் மாதத்தில் 18 செ.மீ மழை பெய்யக்கூடும். தற்போது 132 சதவீதத்திற்கு மேல் என்ற அளவில் இயல்பை விட கூடுதலாக மழை பெய்யக்கூடிய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போதைய வானிலை நிலவரப்படி கடலின் வெப்பநிலை, IOD எனும் இந்திய பெருங்கடலின் இரு துருவங்களும் தமிழகத்திற்கு மழை தரக்கூடிய சாதகமான நிலையில் உள்ளதால் டிசம்பர் மாதம் இயல்பை விட கூடுதலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வும் மையம் அறிவித்துள்ளது.
Also Read
-
பாஜகவின் முகத்தை தொடர்ந்து கிழிக்கும் துருவ் ரதி - பட்டியலிட்டு அமைச்சர் மனோ தங்கராஜ் பாராட்டு !
-
இது தான் மோடி குடும்பமா? : குற்றவாளிகளை காப்பாற்றும் பா.ஜ.க.விற்கு குவியும் கண்டனங்கள்!
-
சந்திரசேகர் ராவ் அடுத்த 48 மணி நேரத்திற்கு பிரசாரம் செய்ய தடை - தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பின்னணி ?
-
விருதுநகர் வெடி விபத்தில் 3 பேர் பலி:முதலமைச்சர் இரங்கல் -அரசின் உதவி விரைந்து வழங்கப்படும் எனவும் உறுதி!
-
ஆபாச வீடியோ சர்ச்சை : “பிரஜ்வலை இந்தியா அழைத்து வர வேண்டும்...” - பிரதமர் மோடிக்கு சித்தராமையா கடிதம் !