Tamilnadu
“கோப்புகளை வெறும் காகித கட்டுகளாக நினைத்துவிடாதீர்கள்; அதில் ஏழைகளின் துயரம் இருக்கும்”: இறையன்பு பேச்சு!
சென்னை அண்ணா நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரி மற்றும் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி அரசு அலுவலர் பயிற்சி நிலையம் சார்பில் அரசு அலுவலர்களுக்கான அடிப்படைப் பயிற்சியினை நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.
அரசு அலுவலர்களுக்கான அடிப்படைப் பயிற்சி தொடக்க நிகழ்ச்சியில் தலைமைச் செயலர் இறையன்பு உரையாற்றினார். அப்போது அவர், “பயிற்சி என்பது ஒரு தொடக்கம்தான். பயிற்சியைத் தொடர்ந்து தான் எவ்வாறு கோப்புகளை கையாள்கிறோம் என்பது அமையும்.
ஒவ்வொருவரும் கோப்புகளைக் கையாளும்போது, அவற்றை வெறும் காகிதக் கட்டுகளாக நினைத்துவிடாதீர்கள். ஏழைகளின் துயரம் இருக்கும், கைம்பெண்ணின் கண்ணீர் அந்தக் கோப்புகளில் இருக்கும். எத்தனை பயிற்சி கொடுத்தாலும் நேர்மையை கற்றுத் தந்துவிட முடியாது. அதை நீங்கள்தான் கைக்கொள்ள வேண்டும். நேர்மையைப் போல மகிழ்ச்சி அளிப்பது வேறு எதுவும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!