Tamilnadu
நடிகர்கள், தொழிலதிபர்களைக் குறிவைத்து ரூ.200 கோடி மோசடி செய்த தம்பதி: போலிஸில் சிக்கியது எப்படி?
தெலங்கானா மாநிலம், ஐதராபாத் காந்தி பேடு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாஸ். இவரது மனைவி ஷில்பாசவுத்ரி. இந்த தம்பதியினர் தொழிலதிபர்கள் மற்றும் நடிகர்களைச் சந்தித்து விருந்துக்கு அழைப்பார்கள்.
அப்போது, நாங்கள் தொழில் ஒன்று தொடங்கப் போகிறோம். இதற்குப் பணம் தேவைப்படுகிறது. இதில் நீங்கள் முதலீடு செய்தால், வட்டியுடன் பணத்தை இரட்டிப்பாக்கித் தருகிறோம் என கூறியுள்ளனர்.
இதை நம்பிய தொழிலதிபர்கள் மற்றும் நடிகர்கள் பலர் இவர்களுக்குப் பணம் கொடுத்துள்ளனர். இப்படி ரூ.200 கோடி வரை வசூல் செய்துள்ளனர். இதையடுத்து இந்த தம்பதிகளால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் போலிஸில் புகார் கொடுத்தார்.
இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து சீனிவாஸ் மற்றும் ஷில்பாசவுத்ரியை கைது செய்தனர். மேலும் யார் யாரிடம் இவர்கள் மோசடி செய்துள்ளார்கள் என்பது பற்றி தீவிரமாக போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
“ஒயிட் வாஷான ஆப்கானிஸ்தான்.. கடைசி ஆட்டத்தில் ரோகித், ஜெய்ஸ்வால் அதிரடி” - முழுத் தகவல் உள்ளே!
-
“CBSE பள்ளிகளுக்கு NOC சான்றிதழ்.. சட்டம் தெரியுமா? தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கூறும் பொய்!”
-
உணவுக்குப் பதில் பிஸ்கட் : காலை உணவு திட்டத்தில் அலட்சியம் காட்டும் த.வெ.க அரசு!
-
“நான் முதல்வன் திட்டத்தை முடக்குவது இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயல்” : மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
பேரவை நேரலை இருட்டடிப்பு: “இதுவும் பாசிச நடவடிக்கையே” - சபாநாயகருக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கடிதம்!