Tamilnadu
நடிகர்கள், தொழிலதிபர்களைக் குறிவைத்து ரூ.200 கோடி மோசடி செய்த தம்பதி: போலிஸில் சிக்கியது எப்படி?
தெலங்கானா மாநிலம், ஐதராபாத் காந்தி பேடு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாஸ். இவரது மனைவி ஷில்பாசவுத்ரி. இந்த தம்பதியினர் தொழிலதிபர்கள் மற்றும் நடிகர்களைச் சந்தித்து விருந்துக்கு அழைப்பார்கள்.
அப்போது, நாங்கள் தொழில் ஒன்று தொடங்கப் போகிறோம். இதற்குப் பணம் தேவைப்படுகிறது. இதில் நீங்கள் முதலீடு செய்தால், வட்டியுடன் பணத்தை இரட்டிப்பாக்கித் தருகிறோம் என கூறியுள்ளனர்.
இதை நம்பிய தொழிலதிபர்கள் மற்றும் நடிகர்கள் பலர் இவர்களுக்குப் பணம் கொடுத்துள்ளனர். இப்படி ரூ.200 கோடி வரை வசூல் செய்துள்ளனர். இதையடுத்து இந்த தம்பதிகளால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் போலிஸில் புகார் கொடுத்தார்.
இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து சீனிவாஸ் மற்றும் ஷில்பாசவுத்ரியை கைது செய்தனர். மேலும் யார் யாரிடம் இவர்கள் மோசடி செய்துள்ளார்கள் என்பது பற்றி தீவிரமாக போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!
-
TVK Fails... ! ஆட்சியே அமைக்கவில்லை அதற்குள் : த.வெ.க-வினரின் மூன்று சம்பங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி!
-
ரவுடிபோல் வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய த.வெ.க MLA : பொதுமக்கள் அதிர்ச்சி!