Tamilnadu
எப்ப பார்த்தாலும் செல்போன் தானா.. பெற்றோர் கண்டித்ததால் வேதனை - விபரீத முடிவெடுத்த கல்லூரி மாணவர்!
அரியலூர் மாவட்டம், நல்லநாயக்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் கல்லூரியில் சேர்ந்து முதலாமாண்டு டிப்ளமோ படித்து வந்தார். இந்நிலையில், செல்வகுமார் வீட்டில் எந்த நேரம் பார்த்தாலும் செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார். இதை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் செல்வகுமார் விரக்தியிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 10ம் தேதி வீட்டில் விஷம் அருந்தியுள்ளார். இதை அறிந்த அவரது பெற்றோர் உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்குச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் செல்வகுமார் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோர் திட்டியதால் விஷம் அருந்தி கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“பெண்கள் என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாமா ?” - சவுக்கு மீடியா சங்கருக்கு மகளிர் காங்கிரஸ் கண்டனம் !
-
பாலியல் வழக்கு : தொடர்ந்து எழும் புகார்... கர்நாடக முன்னாள் அமைச்சர் HD ரேவண்ணா அதிரடி கைது !
-
புகழ்பெற்ற மல்யுத்த வீரரை வீழ்த்திய வீராங்கனை... தோல்வியே சந்திக்காத இந்திய பெண்ணை கௌரவித்த Google!
-
இந்தியப் பெருங்கடலில் பல மடங்கு அதிகரித்த வெப்பநிலை : கால நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கை !
-
பிரஜ்வல் ரேவண்ணாவை பிரதமர் மோடி எதற்காக பாதுகாத்து வருகிறார்? : ராகுல் காந்தி கேள்வி!