Tamilnadu
எப்ப பார்த்தாலும் செல்போன் தானா.. பெற்றோர் கண்டித்ததால் வேதனை - விபரீத முடிவெடுத்த கல்லூரி மாணவர்!
அரியலூர் மாவட்டம், நல்லநாயக்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் கல்லூரியில் சேர்ந்து முதலாமாண்டு டிப்ளமோ படித்து வந்தார். இந்நிலையில், செல்வகுமார் வீட்டில் எந்த நேரம் பார்த்தாலும் செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார். இதை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் செல்வகுமார் விரக்தியிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 10ம் தேதி வீட்டில் விஷம் அருந்தியுள்ளார். இதை அறிந்த அவரது பெற்றோர் உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்குச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் செல்வகுமார் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோர் திட்டியதால் விஷம் அருந்தி கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!