Tamilnadu
”இனி மருந்துச் சீட்டு இல்லாமல் மாத்திரைகள் வழங்கக் கூடாது” - மருந்தகங்களுக்கு சென்னை போலிஸ் முக்கிய ஆணை!
மருந்துக்கடைகளில் போதைத்தரக் கூடிய மருந்து, மாத்திரைகளை சில இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் வாங்கி போதைக்காக பயன்படுத்தி குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவது காவல் துறை கவனத்திற்கு தெரியவந்தது.
இதனை அடுத்து போதை தரக்கூடிய மருந்து மாத்திரைகள் விற்பனை செய்வதை கட்டுப்படுத்த மருந்துக்கடை உரிமையாளர்களுடன் சென்னை காவல்துறை சார்பில் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்றது.
சென்னை காவல்துறை கூடுதல் ஆணையர்கள் கண்ணன் மற்றும் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட மருந்துக்கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். போதை தரக்கூடிய மருந்து மற்றும் மாத்திரைகளை விற்பனை செய்வது குறித்து சில கட்டுப்பாடுகள் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி போதை தரக்கூடிய மருந்துகள் மற்றும் மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையின்றி யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது எனவும் மேலும் அவற்றை உரிய மருந்துவர்களின் ஆலோசனை இல்லாமல் என்பதை அனைத்து மருந்து சுவரொட்டிகளை விற்பனை செய்ய இயலாது கடைகளிலும் எச்சரிக்கையுடன் கூடிய ஒட்டியிருக்க வேண்டும் என போலீசார் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
மருந்துகள் விற்பனை செய்யும் விபரங்களை முறையான பதிவேட்டில் பதிந்து பராமரிக்க வேண்டும் என்றும் அனைத்து மருந்து கடைகளிலும், சாலைகளை நோக்கியும், மருந்து கடைகளுக்குள்ளும் CCTV கேமராக்களை கண்டிப்பாக பொருத்தவேண்டும் என மருந்து உரிமையாளர்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
Also Read
-
“நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது” -முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வருத்தம்!
-
5வது மாடியில் இருந்து வீசப்பட்ட பேச்சிளம் குழந்தை... தாயை அதிரடியாக கைது செய்த போலீஸ் -விசாரணையில் பகீர்!
-
காணாமல் போன மோடி : காணவில்லை என சுவரொட்டி அடித்த மணிப்பூர் மக்கள்!
-
பிரசாரத்துக்கு சென்ற பாஜக வேட்பாளருக்கு எதிர்ப்பு: சம்பவ இடத்திலேயே விவசாயி பரிதாப பலி -குவியும் கண்டனம்!
-
“பெண்கள் என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாமா ?” - சவுக்கு மீடியா சங்கருக்கு மகளிர் காங்கிரஸ் கண்டனம் !