Tamilnadu
“கல்லூரி மாணவியை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவு செய்த இளைஞர்” : தேனி மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்த டேனியல் ராஜ். இவர் அப்பகுதியைச் சேர்ந்த 17 வயதாகும் கல்லூரி மாணவியிடம் நட்பாக பேசிவந்துள்ளார். இந்நிலையில், திருமண ஆசை வார்த்தை கூறி கல்லூரி மாணவியை கடத்திச் சென்று பாலியல் உடலுறவில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து மாணவி கொடுத்தப் புகாரின் பேரில், பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் கடந்த 2019ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையானது தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், வழக்கு விசாரணை முடிவுற்று இளைஞர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதால் இளைஞர் டேனியல் ராஜுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், மூவாயிரம் ரூபாய் அபராதம், அதை கட்ட தவறினால் மேலும் 6 மாத கால மெய்க்காவல் சிறைத்தண்டனையும், மாணவியை கடத்திச் சென்ற குற்றத்திற்காக இரண்டு வருடகால சிறை தண்டனையும், 2000 ரூபாய் அபராதம் அதை கட்டத்தவறினால் மேலும் ஆறு மாதகால சிறை தண்டனை விதித்து இன்று தேனி மாவட்டம் மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜே வெங்கடேசன் தீர்ப்பு வழங்கி உள்ளார்.
Also Read
-
“இன்றும் கழகத்தின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் நாகூர் ஹனிபா” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
-
டென்ஷனா இருந்தா... VIBE WITH MKS நிகழ்ச்சியில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வடகிழக்கு பருவ மழையால் பாதித்த பயிர்கள்: ரூ.289.63 கோடி நிவாரண நிதி அறிவித்த அமைச்சர் MRK பன்னீர்செல்வம்
-
போராட்டம் வாபஸ் - 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
“எல்லாருக்கும் எல்லாம் என்ற கழக ஆட்சி தொடரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!