Tamilnadu
“குடிபோதையில் பக்கத்து வீட்டுக்குள் நிர்வாணமாக நுழைந்த அதிமுக முன்னாள் எம்.பி” : போலிஸார் வழக்கு பதிவு!
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் நீலகிரி தொகுதி மக்களவை எம்.பி.,யாக கோபாலகிருஷ்ணன் இருந்தார். இவர் நகராட்சி தலைவராகவும் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அ.தி.மு.க முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன் மது போதையில், முத்தாலம்மன் பேட்டை பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டிற்குள் வெறும் உடம்புடன் நுழைந்துள்ளார்.
உடனடியாக அந்த வீட்டின் உரிமையாளர் முன்னாள் எம்.பி-யை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் அவர் நிர்வாணமாக இருப்பதை வீடியோ பதிவு செய்துள்ளனர். உடனடியாக குன்னூர் நகர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர். முன்னாள் அ.தி.மு.க எம்.பி கோபாலகிருஷ்ணன் தன்னை தாக்கியதாக கூறி இன்று குன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து இருவரையும் விசாரணை நடத்திய காவல்துறையினர் வீட்டிற்குள் குடிபோதையில் தகாத வார்த்தை பேசிய முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன் மீதும், அவர் மீது தாக்குதல் நடத்திய வீட்டின் உரிமையாளர் கோபி மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். அ.தி.மு.க முன்னாள் எம்.பி மது போதையில் அடுத்தவரின் வீட்டிற்குள் முழு நிர்வாணமாக இருந்த சம்பவம் நீலகிரி அ.தி.மு.க.,வில் பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?
-
தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான மசோதா : காப்பீட்டு திருத்த மசோதாவுக்கு தி.மு.க MP எதிர்ப்பு!
-
தேசத்தையே இழிவுபடுத்திய மோடி அரசு : மகாத்மா காந்தி பெயர் நீக்கம் - இந்தியா கூட்டணி MP-க்கள் எதிர்ப்பு!
-
ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்... அறிவித்த ஒன்பதே மாதத்தில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!
-
100 நாள் வேலை திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் பா.ஜ.க அரசு : அமைச்சர் ஐ.பெரியசாமி கண்டனம்!