Tamilnadu
ஊஞ்சல் கட்டி விளையாடிய சிறுமிக்கு நேர்ந்த கொடுமை... பெற்றோரின் கவனக்குறைவால் ஏற்பட்ட சோகம்!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள சேதுவராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகள் ரூபலட்சுமி. இவர் அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் பெற்றோர் இல்லாதபோது ரூபலட்சுமி மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த சேலை ஒன்றை எடுத்து ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென சேலை சிறுமியின் கழுத்தைச் சுற்றிக் கொண்டு இறுக்கியதில் மயக்கமடைந்து சரிந்துள்ளார். பிறகு வெளியே சென்ற பெற்றோர் வீட்டிற்கு வந்தபோது சிறுமி சேலையில் கழுத்தைச் சுற்றிய நிலையில் மயங்கி இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
உடனே சிறுமியை அருகே இருந்த மருத்துவமனைக்குப் பெற்றோர் அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாகக் கூறினர்.
மருத்துவர்கள் கூறியதைக் கேட்டுப் பெற்றோர்கள் கதறி அழுத சம்பவம் மருத்துவமனையில் இருந்தவர்களை சோகத்தில் மூழ்கடித்தது. இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!