Tamilnadu
ஊஞ்சல் கட்டி விளையாடிய சிறுமிக்கு நேர்ந்த கொடுமை... பெற்றோரின் கவனக்குறைவால் ஏற்பட்ட சோகம்!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள சேதுவராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகள் ரூபலட்சுமி. இவர் அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் பெற்றோர் இல்லாதபோது ரூபலட்சுமி மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த சேலை ஒன்றை எடுத்து ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென சேலை சிறுமியின் கழுத்தைச் சுற்றிக் கொண்டு இறுக்கியதில் மயக்கமடைந்து சரிந்துள்ளார். பிறகு வெளியே சென்ற பெற்றோர் வீட்டிற்கு வந்தபோது சிறுமி சேலையில் கழுத்தைச் சுற்றிய நிலையில் மயங்கி இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
உடனே சிறுமியை அருகே இருந்த மருத்துவமனைக்குப் பெற்றோர் அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாகக் கூறினர்.
மருத்துவர்கள் கூறியதைக் கேட்டுப் பெற்றோர்கள் கதறி அழுத சம்பவம் மருத்துவமனையில் இருந்தவர்களை சோகத்தில் மூழ்கடித்தது. இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
தமிழ்நாட்டின் திட்டங்களுக்கான நிதியை எப்போது விடுவிப்பீர்கள்? கேள்விகளை அடுக்கிய தி.மு.க எம்.பிக்கள்!
-
“வரலாற்றில் இடம்பிடித்த சிலை…மார்க்ஸை வடிவமைக்கும் போது பூரித்தேன்” : நெகிழ்ந்த சிற்பி கார்த்திகேயன்!
-
U19 உலகக்கோப்பை: சூர்ய வம்சியின் அதிரடி ஆட்டம்! இங்கிலாந்திற்கு 411 ரன்கள் இமாலய இலக்கு நிர்ணயம்!
-
6 புதிய சமத்துவபுரங்கள்: சாலை, பாலங்கள்- புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.348.59 கோடி செலவில் அரசு மருத்துவமனை கட்டடங்கள்: மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் முதலமைச்சர்!