Tamilnadu
கரடிப்பட்டி டு ஹைதராபாத் IIT.. அரசுப் பள்ளி மாணவரின் முழு கல்விச் செலவையும் ஏற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர், விரைவில் ஹைதராபாத் ஐ.ஐ.டியில் படிக்கவிருக்கிறார். அவரது கல்வி செலவு முழுவதையும் அரசே ஏற்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம், கரடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொன்னழகன், பூவாத்தாள் தம்பதியரின் மகன் அருண்குமார் (17), செவல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்.
அருண்குமார் சமீபத்தில் நடைபெற்ற ஜே.இ.இ தேர்வில் வெற்றி பெற்று, 17,061-வது இடமும் ஜே.இ.இ மெயின் தேர்விலும் தேர்ச்சி பெற்று 12,175-வது இடத்தையும் பிடித்துள்ளார்.
அருண்குமார், இந்த ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT-ஹைதராபாத்) பொறியியல் படிப்பு படிப்பதற்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இந்நிலையில், மாணவர் அருண்குமாரின் குடும்ப நிலை அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அருண்குமாரை குடும்பத்தோடு நேரில் வரவழைத்து பாராட்டி வாழ்த்தினார்.
எளிய பின்புலத்திலிருந்து வந்து, அரசுப் பள்ளியில் படித்து இச்சாதனையை நிகழ்த்திய மாணவரைப் பாராட்டிய மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மேற்படிப்புக்கான கல்விச் செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என உறுதியளித்தார்.
Also Read
-
தமிழ்நாட்டின் திட்டங்களுக்கான நிதியை எப்போது விடுவிப்பீர்கள்? கேள்விகளை அடுக்கிய தி.மு.க எம்.பிக்கள்!
-
“வரலாற்றில் இடம்பிடித்த சிலை…மார்க்ஸை வடிவமைக்கும் போது பூரித்தேன்” : நெகிழ்ந்த சிற்பி கார்த்திகேயன்!
-
U19 உலகக்கோப்பை: சூர்ய வம்சியின் அதிரடி ஆட்டம்! இங்கிலாந்திற்கு 411 ரன்கள் இமாலய இலக்கு நிர்ணயம்!
-
6 புதிய சமத்துவபுரங்கள்: சாலை, பாலங்கள்- புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.348.59 கோடி செலவில் அரசு மருத்துவமனை கட்டடங்கள்: மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் முதலமைச்சர்!