Tamilnadu
₹5 கோடி நிலத்தை அபகரித்த திருப்பூர் பாஜக நிர்வாகி; நடவடிக்கை எடுக்கக் கேட்டு ஆட்சியரிடம் மூதாட்டி மனு!
திருப்பூர் போயம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நஞ்சம்மாள். இவருக்கு கஞ்சம்பாளையம் பகுதியில் சுமார் 5 கோடி மதிப்பிலான 70 சென்ட் நிலம் உள்ளது.
இவரது நிலத்தின் அருகில் பாஜகவின் முன்னாள் வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த சின்னசாமி என்பவருக்கு மூன்று ஏக்கர் நிலம் இருந்துள்ளது.
இந்நிலையில் அரசியல் கட்சியின் அதிகார போக்கினை வைத்து கொண்டு மூதாட்டி நஞ்சம்மாளின் 70 சென்ட் நிலத்தை பாஜக பிரமுகர் சின்னசாமி அபகரித்ததோடு, மூதாட்டியை அடியாட்களை வைத்து காலி செய்ய வைத்திருக்கிறார்.
இதனையடுத்து, தன்னை ஏமாற்றி தன்னுடைய நிலத்தை அபகரித்த பாஜக நிர்வாகி சின்னசாமி மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் ஆணையரிடமும் பல்வேறு அதிகாரிகளிடமும் மனு கொடுத்ததும் நடவடிக்கை எடுக்காத நிலையில் நஞ்சம்மாள் இன்று மாவட்ட ஆட்சியர் வினித்திடம் தன்னுடைய நிலத்தை மீட்டு தரக்கோரி மனு கொடுத்தார்.
மனுவை பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
Also Read
-
“அழிவை உருவாக்க துடிக்கும் பாஜக... சட்டத்தை மாற்ற நினைப்பவர்களை மக்கள் மாற்றுவார்கள்” : முரசொலி சூளுரை!
-
தேர்வு முடியும் முன்பே வெளியான தேர்வுத்தாள் : ராஜஸ்தான் நீட் தேர்வில் நடைபெற்ற மாபெரும் மோசடி !
-
காசாவுக்கு பிறகு லெபனானை தாக்க தயாராகும் இஸ்ரேல் ? எல்லையில் இருந்து 1,80,000 பேர் இடம்பெயர்வு !
-
பாஜக தேசிய தலைவர் JP நட்டா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு - பின்னணி என்ன ?
-
பாஜக தேர்தல் அறிக்கை : 76 பக்கத்தில் 67 முறை இடம்பெற்ற ‘மோடி’ பெயர் - வருத்தெடுக்கும் இணையவாசிகள்!