Tamilnadu
₹5 கோடி நிலத்தை அபகரித்த திருப்பூர் பாஜக நிர்வாகி; நடவடிக்கை எடுக்கக் கேட்டு ஆட்சியரிடம் மூதாட்டி மனு!
திருப்பூர் போயம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நஞ்சம்மாள். இவருக்கு கஞ்சம்பாளையம் பகுதியில் சுமார் 5 கோடி மதிப்பிலான 70 சென்ட் நிலம் உள்ளது.
இவரது நிலத்தின் அருகில் பாஜகவின் முன்னாள் வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த சின்னசாமி என்பவருக்கு மூன்று ஏக்கர் நிலம் இருந்துள்ளது.
இந்நிலையில் அரசியல் கட்சியின் அதிகார போக்கினை வைத்து கொண்டு மூதாட்டி நஞ்சம்மாளின் 70 சென்ட் நிலத்தை பாஜக பிரமுகர் சின்னசாமி அபகரித்ததோடு, மூதாட்டியை அடியாட்களை வைத்து காலி செய்ய வைத்திருக்கிறார்.
இதனையடுத்து, தன்னை ஏமாற்றி தன்னுடைய நிலத்தை அபகரித்த பாஜக நிர்வாகி சின்னசாமி மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் ஆணையரிடமும் பல்வேறு அதிகாரிகளிடமும் மனு கொடுத்ததும் நடவடிக்கை எடுக்காத நிலையில் நஞ்சம்மாள் இன்று மாவட்ட ஆட்சியர் வினித்திடம் தன்னுடைய நிலத்தை மீட்டு தரக்கோரி மனு கொடுத்தார்.
மனுவை பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
Also Read
-
தமிழ்நாட்டின் திட்டங்களுக்கான நிதியை எப்போது விடுவிப்பீர்கள்? கேள்விகளை அடுக்கிய தி.மு.க எம்.பிக்கள்!
-
“வரலாற்றில் இடம்பிடித்த சிலை…மார்க்ஸை வடிவமைக்கும் போது பூரித்தேன்” : நெகிழ்ந்த சிற்பி கார்த்திகேயன்!
-
U19 உலகக்கோப்பை: சூர்ய வம்சியின் அதிரடி ஆட்டம்! இங்கிலாந்திற்கு 411 ரன்கள் இமாலய இலக்கு நிர்ணயம்!
-
6 புதிய சமத்துவபுரங்கள்: சாலை, பாலங்கள்- புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.348.59 கோடி செலவில் அரசு மருத்துவமனை கட்டடங்கள்: மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் முதலமைச்சர்!