Tamilnadu
₹5 கோடி நிலத்தை அபகரித்த திருப்பூர் பாஜக நிர்வாகி; நடவடிக்கை எடுக்கக் கேட்டு ஆட்சியரிடம் மூதாட்டி மனு!
திருப்பூர் போயம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நஞ்சம்மாள். இவருக்கு கஞ்சம்பாளையம் பகுதியில் சுமார் 5 கோடி மதிப்பிலான 70 சென்ட் நிலம் உள்ளது.
இவரது நிலத்தின் அருகில் பாஜகவின் முன்னாள் வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த சின்னசாமி என்பவருக்கு மூன்று ஏக்கர் நிலம் இருந்துள்ளது.
இந்நிலையில் அரசியல் கட்சியின் அதிகார போக்கினை வைத்து கொண்டு மூதாட்டி நஞ்சம்மாளின் 70 சென்ட் நிலத்தை பாஜக பிரமுகர் சின்னசாமி அபகரித்ததோடு, மூதாட்டியை அடியாட்களை வைத்து காலி செய்ய வைத்திருக்கிறார்.
இதனையடுத்து, தன்னை ஏமாற்றி தன்னுடைய நிலத்தை அபகரித்த பாஜக நிர்வாகி சின்னசாமி மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் ஆணையரிடமும் பல்வேறு அதிகாரிகளிடமும் மனு கொடுத்ததும் நடவடிக்கை எடுக்காத நிலையில் நஞ்சம்மாள் இன்று மாவட்ட ஆட்சியர் வினித்திடம் தன்னுடைய நிலத்தை மீட்டு தரக்கோரி மனு கொடுத்தார்.
மனுவை பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!