Tamilnadu
காதலனின் மனைவி புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிட்ட இளம் பெண் : விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இளம் பெண்ணின் புகைப்படம் ஒன்று மார்பிங் செய்து நிர்வாணமாக சமூக வலைதளங்களில் பரவியது. இதனையடுத்து அந்த புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்து அந்த பெண்ணும், அரவது பெற்றோரும் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இந்த வழக்கு குறித்து போலிஸார் விசாரணை நடத்தினர். அப்போது மிபின் ஜோசப் என்ற இளைஞர்தான் இளம் பெண்ணின் நிர்வாணப்படத்தை இணையத்தில் வெளியிட்டது தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது, சௌமியா என்ற பெண் கூறியதால்தான் நான் இப்படி செய்தேன் என போலிஸாரிடம் மிபின் ஜோசப் வாக்குமூலம் அளித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலிஸார் சௌமியாவை பிடித்து விசாரித்தனர்.
அப்போது, அந்த இளம் பெண்ணின் கணவர் சௌமியாவின் முன்னாள் காதலர் என்றும், இவர் சௌமியாவிடம் பணம் வாங்கி திருப்பித் தர ஆத்திரத்தில், பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில் இவ்வாறு செய்ததாகவும் கூறியுள்ளார். மேலும் இருவரையும் பிரித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் மார்பிங் செய்து அந்த பெண்ணிடம் படத்தை சமூகவலைதளங்களில் பதிவேற்றியது தெரியவந்தது.இதையடுத்து போலிஸார் சௌமியா மற்றும் மிபின் ஜோசப் மீது வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் மாவட்ட சிறையில் அடைத்தனர்.
Also Read
-
551 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பாட்டா... 5,000 மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சர் அசத்தல்!
-
எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க அதிரடி நடவடிக்கை - சிறப்பு முயற்சிகள் எடுத்த திராவிட மாடல் அரசு!
-
“நெல் சாகுபடியில் சாதனை... நெல் கொள்முதல் இலக்கினை உயர்த்த வேண்டும்” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
5 ஆண்டுகளில் TNPSC, தேசிய நலவாழ்வு குழுமம் மூலம் 48,418 பேருக்கு பணி ஆணை:அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
அரசுக் கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 5 உதவிப் பேராசிரியர்கள் : பணி ஆணைகளை வழங்கிய முதலமைச்சர்!