Tamilnadu
22 வயதில் பஞ்சாயத்து தலைவரான பொறியியல் மாணவி... 796 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
தென்காசி மாவட்டத்தில் 22 வயது பொறியியல் பட்டதாரியான இளம்பெண் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம் வெங்காடம்பட்டி ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 22 வயதான பொறியியல் கல்லூரி மாணவி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்காடம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு 5 பேர் போட்டியிட்டனர். வெங்காடம்பட்டி ஊராட்சி லெட்சுமியூர் பகுதியைச் சேர்ந்த சாருகலாவும் (22) போட்டியிட்டார்.
நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின்படி 21 வயதான சாருகலா 3,336 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ரேவதி முத்து வடிவு என்பவரை விட 796 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மற்ற மூன்று பேரும் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர்.
ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்ற சாருகலா கோவையில் உள்ள கல்லூரியில் கல்லூரியில் முதுகலை பொறியியல் முதலாமாண்டு படித்து வருகிறார். இவரது தந்தை ரவி சுப்பிரமணியன் செங்கல் சூளை நடத்தி வருகிறார். தாய் சாந்தி அரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றுகிறார்.
தமிழகத்தில் மிகவும் குறைந்த வயதிலேயே ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குத் தேர்வான சாருகலாவை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர். தன்னை வெற்றி பெறவைத்த வாக்காளர்களுக்கு நன்றி கூறியுள்ள சாருலதா, மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றுவேன் என உறுதியளித்துள்ளார்.
Also Read
-
“இலங்கையின் கைப்பிடியில் 61 மீனவர்கள், 248 மீன்பிடிப் படகுகள்!” : ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
கோவையில் ‘சி. சுப்பிரமணியம்’ பெயரில் உயர்மட்ட மேம்பாலம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள்.. தமிழ்நாடு அரசு புதிய சாதனை-விவரம்!
-
திருமணம் ஆகாத இளைஞர்களே குறி... 19 வயதில் 8 ஆண்களை ஏமாற்றிய ஆந்திராவின் கல்யாண ரா(வா)ணி!
-
நிலத்தை சமன் செய்யும்போது கிடைத்த 1 இல்ல 2 இல்ல... 86 தங்க நாணயங்கள்... திருப்பத்தூரில் நடந்தது என்ன?